நடிகை திரிஷா குறித்த பேச்சு.. நடிகர் மன்சூர் அலிகான் மீது வழக்குப் பதிவு.. 2 பிரிவுகளில் எப்ஐஆர்!

Nov 21, 2023,07:59 PM IST

சென்னை: நடிகர் மன்சூர் அலிகான் மீது நுங்கம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 2 பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.


தனியார் யூடியூப் சானலுக்கு அளித்த பேட்டியின்போது லியோ படத்தின் நாயகி திரிஷா குறித்து வில்லனாக நடித்த மன்சூர் அலிகான் சில கருத்துக்களைக் கூறியிருந்தார். அது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. திரிஷா தவிர, குஷ்பு, ரோஜா உள்ளிட்டோர் குறித்தும் அவர் பேசியிருந்தார். அவை முகம் சுளிக்க வைக்கும் வகையில் இருந்ததால் கடும் கண்டனங்கள் குவிந்தன.


மன்சூர் அலிகானுக்கு திரைத்துறையினர், அரசியல் தலைவர்கள் என்று பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். தேசிய மகளிர் ஆணையமும் இந்த விவகாரத்தை தானாக முன்வந்து கையில் எடுத்தது. மன்சூர் அலிகான் மீது  வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு டிஜிபி சங்கர் ஜுவாலுக்கு ஆணையம் கடிதம் அனுப்பியது.




இந்த நிலையில் தற்போது சென்னை நுங்கம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 2 பிரிவுகளின் கீழ் மன்சூர் அலிகான் மீது வழக்குப் பதிவாகியுள்ளது.


இதுதொடர்பாக காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கை:




நடிகர் மன்சூர் அலிகான், நடிகை திரிஷா கிருஷ்ணன் என்பவர் குறித்து கன்னியத்தை குறைக்கும் வகையில் மிகவும் அநாகரிகமான முறையில் அவமானப்படுத்தி, பெண்ணின் அடக்க உணர்ச்சிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசிய வீடியோ சமூகவலைதளத்தில் (X-Twitter) பரவியது. இது குறித்து தேசிய மகளிர் ஆணையம் அளித்த புகாரின் பேரில் சென்னை பெருநகர காவல் W-1 ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இன்று (21.11.2023) நடிகர் மன்சூர் அலிகான் மீது 354 (A), 509 இதச ஆகிய 2 சட்டப்பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்யப்பட்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த வழக்கு தொடர்பாக அடுத்து மன்சூர் அலிகான் விசாரணைக்கு அழைக்கப்படுவார் என்று தெரிகிறது. அவர் கைது செய்யப்படுவாரா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.


பேசியது தப்பு.. மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்க வேண்டும்.. பாரதிராஜா அதிரடி


"நடிகர் சங்கத்துக்கு 4 மணி நேரம் டைம் தர்றேன்"..  அதிர வைத்த மன்சூர் அலிகான்!

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்