சென்னை வாசிகளே கவனம்: "மிச்சாங்" புயலால்.. டிச. 4.. சென்னைக்கு .. மிக கனமழை எச்சரிக்கை!

Nov 30, 2023,04:05 PM IST

- மஞ்சுளா தேவி


சென்னை: வங்கக்கடலில் உருவாகவுள்ள மிச்சாங் புயல் காரணமாக டிசம்பர் 4ஆம் தேதி சென்னையில் மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.


தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி தீவிரமடைந்தது. இது அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் டிசம்பர் 3ம் தேதி புயலாக உருவாகும். இந்தப் புயல் சென்னை அருகே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்நிலையில் தமிழகம் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல்  டிசம்பர் 4ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அறிவித்துள்ளது.


மிக கனமழை மற்றும் கனமழை எச்சரிக்கை:


டிசம்பர் 4ஆம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ,வேலூர், ராணிப்பேட்டை ,ஆகிய ஆறு மாவட்டங்களில் மிக  கனமழையும், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ,ஆகிய நான்கு மாவட்டங்களில் கன மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


டெல்டாவுக்கு கன மழை


டிசம்பர் 1, 2, மற்றும் 3 தேதிகளில் டெல்டா மாவட்டங்களான கடலூர், நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை ,ஆகிய மாவட்டங்களில்  கனமழையை எதிர்பார்க்கலாம்.


கனமழை காரணமாக மாநில பேரிடர் மேலாண்மை துறை செயலர் 14 கடலோர மாவட்ட மக்கள் பாதுகாப்பு கருதி கடிதம் அனுப்பி உள்ளார். இக்கடிதத்தில் அவர் புயல் குறித்தும் ,மழை நீர் வடிகால் பணிகளை முறையாக மேற்கொண்டு நடைமுறைப்படுத்த  அறிவுறுத்தியுள்ளார். 


மேலும் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஏற்பாடு செய்யவும், கடலுக்குச் சென்ற மீனவர்கள் கரை திரும்புவதை உறுதி செய்யவும், 14 கடலோர மாவட்டங்களை சேர்ந்த ஆட்சியாளர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். வங்கக் கடலில் உருவாகும் புயல் காரணமாக நாகை மாவட்டத்தில் 13 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது .


தயார் நிலையில் பேரிடர் மீட்புக் குழு


இந்நிலையில் மாநில பேரிடர் மேலாண்மை துறை செயலர் உத்தரவின்படி,மக்களின் பாதுகாப்பு கருதி மீட்பு படையினர் நாகை மாவட்டத்திற்கு விரைந்தனர். மேலும் 27 பேர் கொண்ட மாநில பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் இவர்களுடன் ரப்பர் படகுகள், மரம் வெட்டும் கருவிகள், நீர் மூழ்கி பம்புகள் ,உள்ளிட்ட பொருட்களும் தயார் நிலையில் வைத்திருப்பதாகவும் தகவல் அளித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்