"White Paper": மழை நீர் வடிகால் பணிகள் குறித்து.. அறிக்கை வெளியிட சென்னை மாநகராட்சி பிளான்!

Jan 03, 2024,01:28 PM IST

சென்னை: சென்னையில் மேற்கொள்ளப்பட்ட மழை நீர் வடிகால் பணிகள் குறித்த விவரமான வெள்ளை அறிக்கை வெளியிட்டு விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.


திமுக ஆட்சிக்கு வந்ததும் சென்னையில் மழை நீர் வடிகால் பணிகள் விரிவான முறையில் திட்டமிடப்பட்டு போர்க்கால அடிப்படையில் அது மேற்கொள்ளப்பட்டது. இந்த பணிகள் நகர் முழுவதும் நடைபெற்றது. இந்தப் பணிகள் முடிவுற்றால் சென்னையில் எவ்வளவு பெரிய மழை பெய்தாலும் வெள்ளம் வராது என்று திமுக அரசு கூறி வந்தது.


அதன்படியே சில மழைகள் வந்தபோது பெரிய அளவில் சிட்டியில் தண்ணீர் தேங்கவில்லை. மக்களும் அடடே சூப்பர் என்று ஆச்சரியப்பட்டனர், பாராட்டுகளும் குவிந்தன. ஆனால், சென்னையில் மிச்சாங் புயல் காரணமாக  கனமழை பெய்தது. பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதனால், சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டது.




இதற்காகவே காத்திருந்த எதிர்க்கட்சிகள், மழை நீர் வடிகால் அமைத்தும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது எப்படி, 4000 கோடிக்கு வேலை பார்த்தீர்களே.. அது என்னாச்சு.. எங்கே போச்சு அந்தப் பணம் என்று சரமாரியாக கேள்விகளை எழுப்பினர். இது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் பல தரப்பினரும் கோரிக்கை விட்டனர்.


இருப்பினும் இதற்குப் பதில் அளித்த அமைச்சர் கே.என். நேரு  மழை நீர் வடிகால் பணிகள் குறித்த புள்ளி விவரத்தை வெளியிட்டார். இந்த நிலையில் தற்போது இதுதொடர்பாக விரிவான வெள்ளை அறிக்கையை வெளியிட சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.


மழைநீர் வடிகால் பணிகள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் சுமத்திய குற்றச்சாட்டை விட, சென்னையில் பெரு மழையும், வெள்ளமும் வந்து பாதிப்பை ஏற்படுத்தியது மக்களிடையே கூட அதிருப்தியை ஏற்படுத்தி விட்டது. பலர் சொந்த ஊர்களுக்கு இடம் பெயரும் கட்டாயம் ஏற்பட்டது. பலர் சொந்த வீடுகளை விட்டு நண்பர்கள், உறவினர்கள் வீடுகளுக்கு இடம் பெயரும் சூழல் ஏற்பட்டது. மழை வெள்ளம் நிற்காது என்று சொல்லியும் நின்றது ஏன்று மக்களே கூட கேள்விகளை எழுப்பினர்.


ஆனால் அரசுத் தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கம் என்னவென்றால்.. மழை நீர் வடிகால் பணிகள் நடந்ததால்தான் இந்த அளவுக்காவது நிலைமை சமாளிக்கப்பட்டது. ஒரு வேளை இந்தப் பணிகள் நடந்திருக்காவிட்டால், 2015ல் ஏற்பட்டது போன்ற நிலை ஏற்பட்டிருக்கும். மேலும் இந்த முறை செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து தண்ணீர் திட்டமிட்டு கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற்றப்பட்டதால் பெரும் பாதிப்பை நாம் தவிர்த்திருக்கிறோம். ஒரு ஆண்டில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் பெய்ததால்தான் இந்த அளவுக்கு வெள்ளம் ஏற்பட்டது என்று விளக்கம் அளிக்கப்பட்டது நினைவிருக்கலாம்.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்