மாடுகளே ஜாக்கிரதை.. கூண்டு வண்டிகளுடன் களத்தில் குதித்தது சென்னை மாநகராட்சி

Aug 13, 2023,01:31 PM IST
சென்னை: சென்னையில் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளைப் பிடிக்க சென்னை மாநகராட்சி களத்தில் குதித்துள்ளது.

சென்னை அரும்பாக்கம் பகுதியில் சமீபத்தில், பள்ளி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த மாணவியை மாடு ஒன்று முட்டித் தள்ளியது. சிறிது நேரம் அந்த சிறுமியை விடாமல் மாடு முட்டித் தூக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக பெரிய அளவில் சிறுமிக்கு ஆபத்து ஏற்படவில்லை.




இந்த சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி விட்டது. பள்ளிக்கூடத்திற்குப் போய் விட்டு பத்திரமாக பிள்ளைகள் திரும்பி வருவதற்குள் எப்படியெல்லாம் சோதனைகளை சந்திக்க வேண்டியுள்ளது என்று பலரும் குமுறினர். பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸும் இந்த சம்பவம் குறித்து வேதனை தெரிவித்திருந்தார்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சி மேயர் பிரியா  அதிகாரிகளுடன், சம்பந்தப்பட்ட மாணவி வீட்டுக்குச்  சென்று பார்த்து நலம் விசாரித்தார். சிறுமிக்கு கிப்ட்டும், டெய்ரிமில்க் சாக்லேட்டும் கொடுத்து பரிவுடன் பேசி விட்டு வந்தார்.




தற்போது சென்னை மாநகராட்சி தெருவில் சுற்றித் திரியும் மாடுகளைப் பிடிக்கும் நடவடிக்கையை கையில் எடுத்துள்ளது.  கூண்டு வண்டிகளுடன் மாடு பிடிக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. கடந்த 3 நாட்களில் மட்டும் 71 மாடுகளை ஊழியர்கள் பிடித்துள்ளனர். திருவல்லிக்கேணி, வில்லிவாக்கம், கோயம்பேடு, தண்டையார்ப்பேட்டை ஆகிய பகுதிகளில் இந்த மாடு வேட்டை நடந்து வருகிறது. தொடர்ந்து இந்த  நடவடிக்கை நடைபெறும்.

பசு மாடுகள், கன்றுகளுடன் பிடிக்கப்பட்டால் இரண்டையும் சேர்த்தே முகாமில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாம். அவை பிரிக்கப்பட மாட்டாது. அதேபோல கர்ப்பமாக இருக்கும் பசுக்களுக்கும் உரிய கவனம் செலுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.  மாடு வளர்ப்போர் தங்களது மாடுகளையும், கன்றுகளையும் கொட்டடியில் வைத்தே வளர்க்க வேண்டும் என்றும்,  தெருக்களில் உலவ விடக் கூடாது என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்