சென்னை: சென்னையில் மின்சார ரயிலில் வாசலில் நின்று கொண்டு கம்பியைப் பிடித்தபடி ஆடியும், வெளியில் கையை விட்டுக் கொண்டும் சாகசம் செய்த 16 வயது சிறுவன், மின்சார கம்பத்தில் அடிபட்டு படுகாயமடைந்தான். தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் அந்த சிறுவன் மருத்துவமையில் சிகிச்சை பெற்று வருகிறான்.
பஸ்களில் படிக்கட்டில் தொங்கியபடி பயணிப்பது, மின்சார ரயிலில் வாசலில் நின்று கொண்டு சாகசம் செய்வது இப்படி விபரீதமான விளையாட்டுக்களில் ஈடுபடுவோர் பலர் உயிரைப் பறி கொடுத்தும் கூட இளைஞர்கள் பலர் திருந்தாமல்தான் உள்ளனர். குறிப்பாக சென்னையில் உள்ளூர் மின்சார ரயில்களில் வாசலில் நின்றுகொண்டு சிலர் செய்யும் சேட்டைகள் மிகக் கொடுமையாக இருக்கின்றன. எத்தனை பட்டாலும் திருந்த மாட்டோம் என்று பிடிவாதமாக உள்ள இவர்களால் பலருக்கும் தலைவலியாக உள்ளது.
இந்த நிலையில் இப்படி வாசலில் நின்றபடி சேட்டை செய்த ஒரு சிறுவன், தலையில் அடிபட்டு உயிருக்குப் போராடி வருகிறான். அந்த சிறுவனின் பெயர் அபிலாஷ். 16 வயதேயாகும் அந்த சிறுவன் ராயபுரத்தைச் சேர்ந்தவன். கடந்த 9ம் தேதி இவன் தனது நண்பர்களோடு மின்சார ரயிலில் பயணித்துள்ளான். அப்போது வாசற்படியில் நின்று கொண்டு சாகசம் செய்தபடி வந்துள்ளான் அபிலாஷ். கம்பியை பிடித்துக் கொண்டு ஊஞ்சாடுவது, ஒரு கையால் வெளியில் காற்றில் போய் வருவது என என்னென்னவோ செய்து கொண்டு வந்தான். அப்போது எதிர்பாராதவிதமாக மின் கம்பத்தில் படாரென மோதி கீழே விழுந்து விட்டான்.
இவன் செய்யும் செயல்களை வீடியோ எடுத்துக் கொண்டிருந்த இவனது நண்பர்கள் அதிர்ச்சி அடைந்து அபிலாஷ் அபிலாஷ் என கூப்பிட்டுக் கத்தினர். செத்துட்டாண்டா, செத்துட்டாண்டா என்றும் அவர்கள் அலறியதும் வீடியோவில் பதி்வாகியுள்ளது. ராயபுரம் ரயில்வே போலீஸார் சிறுவனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் அபிலாஷ் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. இதெல்லாம் தேவையா.. இப்படிப்பட்ட சாகசங்கள் ஒஒருபோதும் பாதுகாப்பானதல்ல.. ஒரு நொடியில் உயிர் போய் விடும்.. இனியாவது பொறுப்புடனும், நிதானத்துடனும் நடந்து கொள்ள வேண்டும் இளைஞர்கள்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
14க்கு 14 அடி செல்லில்.. அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தஹவூர் ராணா.. பலத்த பாதுகாப்பு!
தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம்: ஏப்., 15ம் தேதி முதல் ஜூன் 14ம் தேதி வரை
தமிழ்நாடு பாஜக தலைவராகிறார் நயினார் நாகேந்திரன்.. போட்டியின்றி தேர்வாகிறார்!
400 ஏக்கர் வனப்பகுதியை அழிக்கும் முடிவை தெலுங்கானா மாநில அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!
தமிழகத்தில்.. இன்று முதல் 17ஆம் தேதி வரை.. ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருக்கு!
விக்கிரவாண்டியை தொடர்ந்து கோவை.. த.வெ.க பூத் ஏஜென்ட் மாநாடு நடத்த முடிவு!
குமரி அனந்தன் மறைவு.. தமிழிசைக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய மத்திய அமைச்சர் அமித்ஷா!
மாற்றுத்திறனாளிகள் குறித்த சர்ச்சை பேச்சு...வருத்தம் தெரிவித்த அமைச்சர் துரைமுருகன்
காங்கிரஸ் கம்யூனிஸ்ட்டை கண்டித்து.. தீர்மானங்களை கொண்டு வாங்க பார்ப்போம்..எடப்பாடி பழனிச்சாமி சவால்
{{comments.comment}}