"6000 கி.மீ டூ பூஜ்யம்".. தரமான சம்பவத்திற்குத் தயாராகும் சந்திரயான் 3!

Aug 21, 2023,11:22 AM IST

பெங்களூரு:  சந்திரயான் 3 விண்கலம் நிலவில் தரையிறங்கும் நேரத்தை நெருங்கி விட்டது. நிலவில் தரையிறங்கும் கடைசி நேர நடைமுறைகள் தொடங்கியுள்ள நிலையில் நிலவின் நிலப்பரப்பு தொடர்பான புதிய புகைப்படங்களையும் சந்திரயான் 3 அனுப்பியுள்ளது.


இந்தியாவின் 3வது நிலவுத் திட்டமான சந்திரயான் 3, வெற்றிகரமாக நிலவை நெருங்கி விட்டது. தற்போது தனது இறுதிக் கட்டமான நிலவில் தரையிறங்குதலுக்காக காத்திருக்கிறது. அதுதொடர்பான கடைசி நேர நடைமுறைகள் தொடங்கியுள்ளன.




மணிக்கு 6000 கிலோமீட்டர் வேகத்தில் தற்போது சென்று கொண்டிருக்கும் சந்திரயான் 3 விண்கலத்தின் லேன்டர், நிலவின் தரைப்பரப்பிலிருந்து பத்து மீட்டர் தொலைவுக்கு வந்ததும் அதன் ராக்கெட்டுகள் அணைக்கப்பட்டு, அதன் வேகம் பூஜ்யமாக்கப்பட்ட பின்னர் நிலவின் தரையில் குதித்துக் கால் பதிக்கும்.


தற்போது படுக்கை வசமாக சென்று கொண்டிருக்கும் சந்திரயான் 3 விண்கலம் நிலவின் தரைப்பரப்பிலிருந்து 100 மீட்டர் உயரம் வந்ததும் 90 டிகிரி அளவுக்கு நேராகி விடும். அதன் பின்னர் தரைப்பரப்பை நோக்கிய பயணம் தொடங்கும்.


சந்திரயான் 3 விண்கலம் தரையிறங்குவது பல கட்டமாக செயல்படுத்தப்படும். சந்திரயான் விண்கலத்தின் லேன்டரின் வேகம் படிப்படியாக குறைக்கப்பட்டு வரும். இதற்காக அதில் பொருத்தப்பட்டுள்ள ராக்கெட்டுகள் படிப்படியாக இயக்கப்படும். ராக்கெட்டுகள் இயக்கப்படுவதால் அதன் வேகம் மட்டுப்படும். 100 மீட்டர் உயரத்தை தொட்டதும், நிலவின் கீழ்ப் பரப்பில் தனக்கு தோதான சூழல்கள் இருக்கிறதா என்பதை  லேன்டர் ஸ்கேன் செய்யும். இதற்காக பிரத்யேக புகைப்படக் கருவிகள், சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளன.




நிலவில் பள்ளமான, குழிகளுடன் கூடிய, குன்றுகளுடன் கூடிய இடங்கள் இருக்கிறதா என்பதை இந்த ஸ்கேனர்கள் ஆராயும்.  சரியான, பாதுகாப்பான இடத்தைக் கண்டறிந்ததும் அந்த இடத்துக்கு மேலே லேன்டர் நிலைநிறுத்தப்படும். அதன் பின்னர் மெதுவாக கீழ் நோக்கி லேன்டர் இயக்கப்படும். 10 மீட்டர் தொலைவு வந்ததும் ராக்கெட்டுகள் நிறுத்தப்பட்டு லேன்டர் நிலவின் தரையில் இறங்கும். தாயின் மடியிலிருந்து குழந்தை எப்படி தரையில் குதிக்குமோ.. அதே போலத்தான் லேன்டரும், நிலவின் தரையில் விழும். 


விழும்போது மிகவும் பாதுகாப்பான முறையில் லேன்டர் இருக்கும் வகையில் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யபபட்டுள்ளன.  லேன்டர் பத்திரமாக தரையைத் தொட்டதும், அதற்கு அடுத்த 2 மணி நேரம் கழித்து உள்ளே இருக்கும் பிரக்யான் ரோவர் வெளியே வரும். அதன் பின்னர் ஆய்வுகள் தொடங்கும்.


இதற்கிடையே, நிலவின் தென் துருவம் குறித்த புதிய புகைப்படங்களை சந்திரயான் 3 அனுப்பி வைத்துள்ளது.  நிலவின் பிரபலமான பல்வேறு பள்ளங்கள் இதில் காணப்படுகின்றன.  இவை பூமியிலிருந்து காண முடியாதவை. அதாவது நிலவின் அந்தப் பக்கம் இருப்பவை. இவற்றை நாம் நிலாவுக்கே போய்த்தான் பார்க்க முடியும். விக்ரம் லேன்டர் இந்தப் புகைப்படங்களை எடுத்து அனுப்பி வைத்துள்ளது. ஹேயன், பாஸ் எல், மாரே ஹம்போல்டியானம், பெல் கோவிச் ஆகிய பள்ளப் பகுதிகள் இதில் காணப்படுகின்றன. 


வருகிற புதன்கிழமை மாலை 6.04 மணியளவில் நிலவில் காலெடுத்து வைக்க சந்திரயான் 3 திட்டமிடப்பட்டுள்ளது. இது வெற்றி பெற்றால், அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் வரிசையில் இந்தியாவும் இணையும். சர்வதேச அளவில் இந்த மூன்று நாடுகள் மட்டுமே நிலவில் காலெடுத்து வைத்துள்ளன. இதில் அமெரிக்கா மட்டுமே மனிதர்களை அனுப்பிய ஒரே நாடாகவும் திகழ்கிறது.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்