எடுத்த சபதம் முடித்த சந்திரபாபு நாயுடு.. 4வது முறையாக ஆந்திர முதல்வராகிறார்.. ஜூன் 9ல் பதவியேற்பு?

Jun 04, 2024,03:21 PM IST

அமராவதி:  ஆந்திர மாநில  சட்டமன்ற தேர்தலில் தெலுங்கு தேசம் கூட்டணி கட்சி முன்னிலையில் உள்ளது. அங்கு ஆட்சியையும் பிடிக்கிறது. இந்நிலையில், ஜூன் 9ம் தேதி முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவி ஏற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.


1970ல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார் சந்திரபாபு நாயுடு. அதன்பின்னர் 1978ல் சந்திரகிரி சட்டசபை தொகுதியில் வெற்றி பெற்றார். பிறகு நடந்த சட்டசபைத் தேர்தலில் சந்திரபாபு நாயுடு தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளரிடமே தோல்வி அடைந்தார். அதன் பின்னர் தெலுங்கு தேசம் கட்சியின் பொதுச் செயலாளரானார். 1989ல்  தெலுங்கு தேசம் எம்எல்ஏவாக சந்திரபாபு நாயுடு தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து 1999ல் நடந்த ஆந்திர சட்டசபை தேர்தலிலும் வெற்றி பெற்றார்.




8 முறை எம்எல்ஏவாகவும், 3 முறை முதல்வராகவும் இருந்துள்ளார் சந்திரபாபு நாயுடு. மேலும் தேசிய முன்னணியின் ஒருங்கிணைப்பாளராகவும் தேசிய அரசியலில் ஈடுபட்டார். பின்னர் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலும் முக்கியப் பங்காற்றினார். கடந்த 2014 முதல் 2019 வரை ஆந்திர முதல்வராக இருந்த சந்திரபாபு நாயுடு கடந்த 2019ல் நடந்த தேர்தலில் படுதோல்வியை சந்தித்தார். 


கடந்த 5 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த முறை வெற்றி பெற்றுள்ளார். 175 தொகுதிகளில் தெலுங்கு தேசம் பாஜக கூட்டணி 137 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. 16 லோக்சபா தொகுதிகளிலும் தெலுங்குதேசம் வெல்லும் நிலையில் உள்ளது. இந்நிலையில் ஜூன் 9ம் தேதி முதல்வராக பதவியேற்க உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. இவரது வெற்றிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.


சில மாதங்களுக்கு முன்பு ஆந்திர மாநில சட்டசபையில் அவமதிக்கப்பட்டார் சந்திரபாபு நாயுடு. இதனால் அழுதபடி வெளியே வந்த  அவர் முதல்வராகத்தான் இனி சட்டசபையில் நுழைவேன் என்று சவால் விட்டிருந்தார். தற்போது முதல்வராக சட்டசபைக்குள் சென்று தனது சபதத்தை நிறைவேற்றவுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

மதுரையை வச்சு செய்யும் வெயில்.. மேலும் சில நாட்கள் வெளுக்குமாம்.. அதிகரிக்கவும் வாய்ப்பு.. கேர்ஃபுல்

news

காட்டுத் தீயாய் பரவிய துணை முதல்வர் வதந்தி.. சிரித்துக் கொண்டே பதிலளித்த உதயநிதி ஸ்டாலின்!

news

ஜிம்பாப்வேயை உலுக்கும் பஞ்சம்.. அதை விரட்ட அரசு எடுத்த முடிவு.. .. அதிர்ச்சியில் நாடுகள்!

news

ஒரே நாடு ஒரே தேர்தல்.. ராம்நாத் கோவிந்த் குழு பரிந்துரைகளை ஏற்றது மத்திய அமைச்சரவை!

news

அழகாய் பூத்தது.. நீலகிரியில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும் நீலக்குறிஞ்சி சீசன் தொடங்கியது!

news

Thalaivettiyan Palayam: ஜிபி முத்து கொடுத்த சூப்பர் ஐடியாஸ்.. கூலாக கேட்டுக் கொண்ட அபிஷேக் குமார்!

news

"பாட்டி கதியே உங்களுக்கும்".. ராகுல்காந்திக்கு பாஜக தலைவர் மிரட்டல்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

news

தீபாவளி ரஷ்ஷை சமாளிக்க.. தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுக்கும் தமிழக அரசு!

news

மீன்வளப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா.. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் புறக்கணித்தார்!

அதிகம் பார்க்கும் செய்திகள்