சந்திரபாபு நாயுடு மனைவிக்கு அதிர்ஷ்டம்.. 5 நாட்களில் ரூ. 535 கோடிக்கு எகிறிய சொத்து மதிப்பு!

Jun 07, 2024,06:55 PM IST

ஹைதராபாத்: தெலுங்கு தேசம் தலைவரும், மத்தியில் பாஜக ஆட்சியமைக்க உதவிக் கரம் நீட்டியுள்ளவருமான சந்திரபாபு நாயுடுவின் மனைவி நர புவனேஸ்வரியின் சொத்து மதிப்பு கடந்த ஐந்து நாட்களில் ரூ. 535 கோடி அதிகரித்துள்ளது.


நர புவனேஸ்வரி ஹெரிட்டேஜ் புட்ஸ் என்ற நிறுவனத்தின் புரமோட்டராக இருக்கிறார். இதை நிறுவியவர் சந்திரபாபு நாயுடுதான். கடந்த ஐந்து நாட்களில் பங்குச் சந்தையில் ஏற்பட்ட உயர்வு காரணமாக இந்த நிறுவனத்தின் பங்குகளும் மதிப்பும் உயர்ந்து வந்தது. இதனால் நர புவனேஸ்வரியின் சொத்து மதிப்பு ரூ. 535 கோடி அளவுக்கு உயர்ந்துள்ளதாம்.




ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு ஆட்சியைப் பிடித்துள்ளார். மத்தியிலும் அவர் கிங் மேக்கராக உருவாகியுள்ளார். இதனால் ஹெரிட்டேஜ் நிறுவனத்தின் பங்கு மதிப்பு கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கிட்டத்தட்ட 55 சதவீத அளவுக்கு பங்குகளின் மதிப்பு உயர்ந்துள்ளதாம். ஜூன் 3ம் தேதி ஒரு பங்கின் மதிப்பு ரூ. 424 ஆக இருந்தது. அதாவது தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்பு இந்த விலை. இப்போது ஒரு பங்கின் மதிப்பு ரூ. 661.25 என உயர்ந்து உள்ளது.




1992ம் ஆண்டு ஹெரிட்டேஜ் புட்ஸ் நிறுவனத்தை உருவாக்கினார் நாயுடு. பால் மற்றும் பாால் பொருட்கள் உள்ளிட்டவற்றை இது தயாரித்து விற்கிறது ஆந்திரா, தமிழ்நாடு, தெலங்கானா, மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா, ஒடிஷா, டெல்லி, ஹரியானா, உத்தரகாண்ட், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் வரை இந்த நிறுவனத்தின் பிசினஸ் நடந்து வருகிறது.


இந்த நிறுவனத்தில் நர புவனேஸ்வரிதான் முன்னணி பங்குதாரர் ஆவார். இவரிடம் 2,26,11,525 பங்குகள் உள்ளன. நாயுடுவின் மகன் நர லோகேஷுக்கு 1,00,37,453 பங்குகள் உள்ளன. நர லோகேஷின் சொத்து மதிப்பும் ரூ. 237.8 கோடி உயர்ந்துள்ளதாம்.

சமீபத்திய செய்திகள்

news

மதுரையை வச்சு செய்யும் வெயில்.. மேலும் சில நாட்கள் வெளுக்குமாம்.. அதிகரிக்கவும் வாய்ப்பு.. கேர்ஃபுல்

news

காட்டுத் தீயாய் பரவிய துணை முதல்வர் வதந்தி.. சிரித்துக் கொண்டே பதிலளித்த உதயநிதி ஸ்டாலின்!

news

ஜிம்பாப்வேயை உலுக்கும் பஞ்சம்.. அதை விரட்ட அரசு எடுத்த முடிவு.. .. அதிர்ச்சியில் நாடுகள்!

news

ஒரே நாடு ஒரே தேர்தல்.. ராம்நாத் கோவிந்த் குழு பரிந்துரைகளை ஏற்றது மத்திய அமைச்சரவை!

news

அழகாய் பூத்தது.. நீலகிரியில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும் நீலக்குறிஞ்சி சீசன் தொடங்கியது!

news

Thalaivettiyan Palayam: ஜிபி முத்து கொடுத்த சூப்பர் ஐடியாஸ்.. கூலாக கேட்டுக் கொண்ட அபிஷேக் குமார்!

news

"பாட்டி கதியே உங்களுக்கும்".. ராகுல்காந்திக்கு பாஜக தலைவர் மிரட்டல்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

news

தீபாவளி ரஷ்ஷை சமாளிக்க.. தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுக்கும் தமிழக அரசு!

news

மீன்வளப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா.. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் புறக்கணித்தார்!

அதிகம் பார்க்கும் செய்திகள்