அதெப்படி ரஜினிகாந்த்தை விமர்சிக்கலாம்.. ஒய்எஸ்ஆர் காங்கிரஸுக்கு சந்திரபாபு நாயுடு கண்டனம்

May 02, 2023,02:39 PM IST

ஹைதராபாத்: சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தை அவதூறாகவும், மரியாதைக் குறைவாகவும் பேசி விமர்சனம் செய்ததற்காக ஒய்எஸ்ஆர். காங்கிரஸ் கட்சியினருக்கு தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு கண்டனம் தெரிவித்துள்ளார்.

மறைந்த என்.டி.ராமாராவின் நூற்றாண்டு விழா சமீபத்தில் விசாகப்பட்டனத்தில் நடந்தது. அதில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். என்டிஆரையும், அவரது மருமகன் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவையும் புகழ்ந்து பேசினார்.  இது ஆந்திராவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

சந்திரபாபு நாயுடு மக்களால் நிராகரிக்கப்பட்டவர். அவரது கட்சிக்கு உயிர் கொடுப்பதற்கு ரஜினிகாந்த் முயலுகிறார் என்று முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி சார்ந்த ஒய்எஸ்ஆர். காங்கிரஸ் கட்சியினர் ரஜினியை விமர்சித்து வருகின்றனர்.



ஜெகன் கட்சியைச் சேர்ந்த நடிகை ரோஜாவும் ரஜினியை கடுமையாக விமர்சித்துள்ளார். ஆந்திர மாநில அரசியல் குறித்து ரஜினிகாந்த்துக்குத் தெரியவில்லை. தெரியாத விஷயத்தைப் பற்றிப் பேசாமல் இருப்பதுதான் நல்லது. அவர் தெரியாமல் பேசியிருப்பதாகத்தான் நான் முதலில் நினைத்தேன். ஆனால் தெரிந்தேதான் பேசியுள்ளார். என்டிஆர் மறைவுக்கு யார் காரணமோ அவரைப் புகழ்ந்து பேசியுள்ளார். இது அதிர்ச்சியாக இருக்கிறது.

என்டிஆரை நாங்கள் கடவுளாகப் பார்க்கிறோம். அப்படிப்பட்டவரின் மரணத்திற்கு யார் காரணமோ அவரைப் புகழ்ந்து பேசியதால் ரஜினிகாந்த் மீது தெலுங்கு மக்கள் கோபமாக உள்ளனர். எதுவும்  தெரியாமல் பேசுவதை அவர் தவிர்க்க வேண்டும். இப்படிப் பேசியதால் அவரது மரியாதை கெட்டுள்ளது. அவர் அரசியலுக்கு வர மாட்டேன் என்று முடிவெடுத்து விட்டார். ஆனால் தேவையில்லாமல் அரசியல் பேசி வருகிறார் என்று சாடியிருந்தார் ரோஜா.

ரஜினியுடன் சில சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ள ரோஜா, ரஜினியை கடுமையாக விமர்சித்திருப்பது சலசலப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் ரஜினிகாந்த்தை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் விமர்சிப்பதற்கு சந்திரபாபு நாயுடு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள ட்வீட்:

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு எதிராக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர்கள் அவதூறான, மரியாதைக் குறைவான கருத்துக்களை தெரிவித்து வருவதற்கு கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ரஜினிகாந்த் சிறந்த மனிதநேயம் மிக்கவர். மிகவும் மரியாதைக்குரியவர், நேர்மைானவர். தங்க மனசுக்காரர். இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோரால் நேசிக்கப்படுபவர். ஒய்எஸ்ஆர் ஜெகன் கட்சிக் கும்பல் அவர் மீது இந்தத் திட்டமிட்ட தாக்குதலை நடத்தி வருவது, அவர்களுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு பறி போவதையே உணர்த்துகிறது. அந்த வெறுப்பில்தான் இப்படிப் பேசுகின்றனர். அவர்களுக்கு மக்கள் சரியான பாடம் கற்பிப்பார்கள் என்று கூறியுள்ளார் சந்திரபாபு நாயுடு.

சமீபத்திய செய்திகள்

news

மதுரையை வச்சு செய்யும் வெயில்.. மேலும் சில நாட்கள் வெளுக்குமாம்.. அதிகரிக்கவும் வாய்ப்பு.. கேர்ஃபுல்

news

காட்டுத் தீயாய் பரவிய துணை முதல்வர் வதந்தி.. சிரித்துக் கொண்டே பதிலளித்த உதயநிதி ஸ்டாலின்!

news

ஜிம்பாப்வேயை உலுக்கும் பஞ்சம்.. அதை விரட்ட அரசு எடுத்த முடிவு.. .. அதிர்ச்சியில் நாடுகள்!

news

ஒரே நாடு ஒரே தேர்தல்.. ராம்நாத் கோவிந்த் குழு பரிந்துரைகளை ஏற்றது மத்திய அமைச்சரவை!

news

அழகாய் பூத்தது.. நீலகிரியில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும் நீலக்குறிஞ்சி சீசன் தொடங்கியது!

news

Thalaivettiyan Palayam: ஜிபி முத்து கொடுத்த சூப்பர் ஐடியாஸ்.. கூலாக கேட்டுக் கொண்ட அபிஷேக் குமார்!

news

"பாட்டி கதியே உங்களுக்கும்".. ராகுல்காந்திக்கு பாஜக தலைவர் மிரட்டல்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

news

தீபாவளி ரஷ்ஷை சமாளிக்க.. தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுக்கும் தமிழக அரசு!

news

மீன்வளப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா.. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் புறக்கணித்தார்!

அதிகம் பார்க்கும் செய்திகள்