டெல்லி: சாம்பியன்ஸ் டிராபி தொடர் 19ம் தேதி தொடங்கவுள்ள நிலையில் இந்திய அணியின் முக்கிய வீரரான ரிஷப் பந்த்துக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்திய அணிக்கு சிறிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி தொடர் வருகிற 19ம் தேதி தொடங்கவுள்ளது. பாகிஸ்தான் நடத்தவுள்ள இந்தத் தொடரில் இந்தியா பங்கேற்கும் போட்டிகள் அனைத்தும் துபாயில் நடைபெறவுள்ளன. இதில் இந்தியாவின் முதல் போட்டி வருகிற 20ம் தேதி நடைபெறவுள்ளது. துபாயில் நடைபெறும் இப்போட்டியில் இந்தியாவை எதிர்த்து வங்கதேசம் மோதவுள்ளது.
இப்போட்டித் தொடருக்காக இந்திய அணி தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில் முக்கிய வீரரும், விக்கெட்கீப்பருமான ரிஷப் பந்த் காயமடைந்துள்ளார். பயிற்சியின்போது அவரது முழங்காலில் அடிபட்டுள்ளது. இதனால் இந்திய அணிக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
ரிஷப் பந்த் கார் விபத்திலிருந்து மீண்டு மீண்டும் விளையாடி வருகிறார். அவர் பங்கேற்கும் முதல் சாம்பியன்ஸ் டிராபி தொடர் இதுதான். இந்திய அணிக்கு குறிப்பாக டி20 மற்றும் ஒரு நாள் போட்டிகளில் நல்ல ஸ்டிரைக் ரேட் இவர் வைத்துள்ளார். இரண்டிலும் சேர்த்து 100 சதவீதம் என்ற அளவுக்கு ஸ்டிரைக் ரேட் வைத்துள்ளார். இந்த நிலையில் அவர் காயமடைந்திருப்பது அணிக்குப் பின்னடைவாக கருதப்படுகிறது.
துபாயில் நடந்த பயிற்சியின்போது ஹர்டிக் பாண்ட்யா வீசிய பந்து, பந்த்தின் இடது முழங்காலில் பட்டதால் அவர் காயமடைந்துள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. வலியால் சிறிது அவதிப்பட்டாலும் கூட தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டுள்ளார் பந்த். கடந்த 2022ம் ஆண்டு நடந்த கார் விபத்தின்போது இதே காலில்தான் அவருக்கு காயம் ஏற்பட்டது என்பதால் இந்த புதிய காயமானது கவலையை ஏற்படுத்தியுள்ளது.
ரிஷப் பந்த் உடல் தகுதி குறித்து அதிகாரப்பூர்வமாக எந்தத் தகவலும் இல்லை. இருப்பினும் அவர் விளையாடுவாரா அல்லது முதல் போட்டியில் பங்கேற்காமல் ஓய்வெடுப்பாரா என்பது குறித்து தெளிவான அறிவிப்பு ஏதும் இதுவரை இல்லை.
23ம் தேதி உலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடைபெறவுள்ளது. பந்த் அந்தப் போட்டிக்கு கண்டிப்பாக விளையாட வேண்டும் என்று ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்க்கின்றனர்.
இந்தியா இதுவரை 2002 மற்றும் 2013 ஆண்டுகள் என 2 முறை சாம்பின்ஸ் டிராபியை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
நல்லவன் வந்தா எரிச்சல்தானே வரும்.. இது பண்ணையார்களுக்கான கட்சி கிடையாது ப்ரோ.. விஜய் அதிரடி
விஜய் தமிழ்நாட்டின் நம்பிக்கை.. அடுத்த ஆண்டு ஆட்சியைப் பிடிப்பார்.. பிரஷாந்த் கிஷோர் பேச்சு
யார் பண்ணையார்?... விமர்சனங்களை அப்படியே திருப்பிப் போட்டு.. விஜய் கொடுத்த நச் பதில்!
பொய் சொல்லி தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் செய்கிறார் முதல்வர் ஸ்டாலின்.. உள்துறை அமைச்சர் அமித் ஷா
என்னை ஆஸ்தான பாடகியாக விஜய் அறிவிக்கட்டும்.. அப்புறம் பாருங்க.. கிடாக்குழி மாரியம்மாள் உற்சாகம்!
இனி என் செயல்பாடுகளும் கோட்பாடுகளும் தளபதி வழியில்.. தவெகவில் இணைந்த ரஞ்சனா நாச்சியார்!
தவெக ஆண்டு விழாவில் பிரசாந்த் கிஷோர்... இதை யாருமே எதிர்பார்க்கலியே... என்னவா இருக்கும்?
அனைத்துக் கட்சிக் கூட்டம்.. அதிமுக, தவெக, நாதக உள்பட 45 கட்சிகளுக்கு தமிழ்நாடு அரசு அழைப்பு!
தவெகவின் முதலாண்டு விழா கோலாகல தொடக்கம்.. பிரஷாந்த் கிஷோருடன் மேடை ஏறிய விஜய்
{{comments.comment}}