துபாய்: பாகிஸ்தான் அணியை இந்தியா பிரமாதமாக வென்று விட்டாலும் கூட இறுதிப் போட்டிக்கு நாம் முன்னேற சில ரிஸ்க்குகள் இருக்கத்தான் செய்கின்றன. அதையும் நாம் தாண்டியாக வேண்டிய நிலை உள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா இதுவரை தான் மோதிய 2 போட்டிகளிலும் வென்றுள்ளது. முதலில் வங்கதேசத்தை வீழ்த்தியது. நேற்று பாகிஸ்தானை தோற்கடித்தது. பாகிஸ்தான் அணி தான் மோதிய 2 போட்டிகளிலும் தோற்றதால், தொடரை விட்டு வெளியேற்றப்பட்டு விட்டது.
இந்தியா அரை இறுதிக்குத் தற்போது தகுதி பெற்றுள்ளது. இருப்பினும் இதில் உறுதி இல்லை. காரணம் அடுத்தடுத்து நடக்கவுள்ள போட்டிகளின் முடிவுகளைப் பொறுத்து இதில் மாற்றம் வர வாய்ப்புள்ளது.
இந்தியா தற்போது 2 போட்டிகளில் வென்று 4 புள்ளிகளுடன் உள்ளது. அடுத்து இந்தியா, நியூசிலாந்து அணியைச் சந்திக்க வேண்டியுள்ளது. அதேபோல வங்கதேசம் அணிக்கு இன்னும் 2 போட்டிகள் (நியூசிலாந்து, பாகிஸ்தான்) உள்ளன. இதில் இந்தியா, நியூசிலாந்திடம் தோற்று, வங்கதேசம் தனது 2 போட்டிகளிலும் வென்றால், இந்தியா அரை இறுதிக்கு நுழைவது சிக்கலாகி விடும்.
காரணம் அப்படி நடந்தால் இந்தியா, நியூசிலாந்து, வங்கதேசம் ஆகிய அணிகள் தலா 4 புள்ளிகளுடன் இருக்கும். அதன் பிறகு நெட் ரன் ரேட் அடிப்படையில் அரை இறுதிக்கான அணிகள் தேர்வாகும். இதெல்லாம் நடக்காமல் இருக்க இந்தியா, தனது கடைசிப் போட்டியில் நியூசிலாந்தை வென்று விட்டால் போதுமானது.
நல்லவன் வந்தா எரிச்சல்தானே வரும்.. இது பண்ணையார்களுக்கான கட்சி கிடையாது ப்ரோ.. விஜய் அதிரடி
விஜய் தமிழ்நாட்டின் நம்பிக்கை.. அடுத்த ஆண்டு ஆட்சியைப் பிடிப்பார்.. பிரஷாந்த் கிஷோர் பேச்சு
யார் பண்ணையார்?... விமர்சனங்களை அப்படியே திருப்பிப் போட்டு.. விஜய் கொடுத்த நச் பதில்!
பொய் சொல்லி தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் செய்கிறார் முதல்வர் ஸ்டாலின்.. உள்துறை அமைச்சர் அமித் ஷா
என்னை ஆஸ்தான பாடகியாக விஜய் அறிவிக்கட்டும்.. அப்புறம் பாருங்க.. கிடாக்குழி மாரியம்மாள் உற்சாகம்!
இனி என் செயல்பாடுகளும் கோட்பாடுகளும் தளபதி வழியில்.. தவெகவில் இணைந்த ரஞ்சனா நாச்சியார்!
தவெக ஆண்டு விழாவில் பிரசாந்த் கிஷோர்... இதை யாருமே எதிர்பார்க்கலியே... என்னவா இருக்கும்?
அனைத்துக் கட்சிக் கூட்டம்.. அதிமுக, தவெக, நாதக உள்பட 45 கட்சிகளுக்கு தமிழ்நாடு அரசு அழைப்பு!
தவெகவின் முதலாண்டு விழா கோலாகல தொடக்கம்.. பிரஷாந்த் கிஷோருடன் மேடை ஏறிய விஜய்
{{comments.comment}}