டெல்லி: மத்திய அரசு வக்பு வாரிய சட்ட மசோதாவை நாளை லோக்சபாவில் தாக்கல் செய்யவுள்ளது. கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் மத்திய அரசு இந்த முடிவை எடுத்திருப்பதால் பிரதான எதிர்க்கட்சி கூட்டணியான இந்தியா கூட்டணி கட்சிகள் முழுமையாக இதை எதிர்த்துப் பேசவும், வாக்களிக்கவும் முடிவு செய்துள்ளன.
வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த மசோதாவை முதலில் லோக்சபாவிலும், பின்னர் ராஜ்யசபாவிலும் தாக்கல் செய்யவுள்ளது. நாளை பிற்பகல் லோக்சபாவில் மசோதா தாக்கல் செய்யப்படவுள்ளது. அதைத் தொடர்ந்து விவாதமும், இறுதியில் வாக்கெடுப்பும் நடைபெறும்.
மத்திய அரசின் இந்த முடிவைத் தொடர்ந்து இந்தியா கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் இன்று அவசர ஆலோசனை நடத்தினர். அதில் விவாதத்தில் முழுஅளவில் கலந்து கொண்டு கடுமையான முறையில் தங்களது எதிர்ப்பைத் தெரிவிக்கவும், வாக்கெடுப்பின்போது மசோதாவுக்கு எதிராக வாக்களிக்கவும் முடிவு செய்யப்பட்டது.
இதுகுறித்து ஆர்எஸ்பி தலைவுர் என்.கே.பிரேமச்சந்திரன் கூறுகையில், விவாதத்தில் முழு அளவில் பங்கேற்போம். கடுமையாக எதிர்பபோம். வாக்கெடுப்பிலும் மசோதாவுக்கு எதிராக வாக்களிப்போம் என்றார்.
நாடு முழுவதும் உள்ள வக்பு வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சொத்துக்களை சரியான முறையில் நிர்வகிக்க இந்த மசோதாவை உருவாக்கியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆனால் இது வக்பு வாரியங்களின் உரிமையைப் பறிப்பதாக எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன.
லோக்சபாவிலும் அடுத்து ராஜ்யசபாவிலும் இந்த மசோதா தாக்கல் செய்யப்படவுள்ளதால் தனது கட்சி எம்.பிக்கள் அனைவரும் அடுத்த சில நாட்களுக்கு தவறாமல் சபைக்கு வர வேண்டும் என்று கொறடா உத்தரவை காங்கிரஸ் கட்சி பிறப்பித்துள்ளது.
கச்சத்தீவை மீட்க வேண்டும்.. முதல்வர். மு.க.ஸ்டாலின் தனி தீர்மானம்.. ஒரு மனதாக நிறைவேற்றம்!
அடுத்தடுத்த என்கவுண்டர்.. அதிரடி காட்டும் தமிழ்நாடு போலீஸ்.. பதற்றத்தில் கிரிமினல்கள்!
பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி உடல் நலம் பாதிப்பு.. கராச்சி மருத்துவமனையில் அனுமதி
கோடை காலத்தை முன்னிட்டு.. சென்னையிலிருந்து.. 206 சிறப்பு விமானங்கள் இயக்கம்..!
சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி..ஏற்காடு பகுதிகளில் கேம்ப் ஃபயருக்கு தடை..!
மகனுங்களா.. இப்படியே வம்பு பண்ணிட்டிருந்தீங்கன்னா.. வச்சார் பாருங்க நித்தியானந்தா ஆப்பு!
தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலையே தொடர வேண்டும்.. கருத்துக் கணிப்பில் பலரும் ஆதரவு!
எச்சரிக்கும் கண் மருத்துவர்கள்.. மெட்ராஸ் ஐ பாதிப்பு.. வழக்கத்தை விட 20 சதவீதம் அதிகரிப்பு..!
அதிர்ச்சி ரிப்போர்ட்.. பெங்களூரில்.. ஐஸ்கிரீம், குளிர்பானத்தில் கலப்படம் செய்யப்படுவதாக புகார்..!
{{comments.comment}}