அதிர வைத்த சர்வதேச கால்கள்.. வாட்ஸ் ஆப்பிடம் விளக்கம் கேட்கும் மத்திய  அரசு!

May 12, 2023,09:51 AM IST
டெல்லி:  வாட்ஸ் ஆப்களில் வந்து கொண்டிருக்கும் தேவையில்லாத சர்வதேச கால்கள் குறித்து மத்திய அரசு கவலை அடைந்துள்ளது. இதுதொடர்பாக வாட்ஸ் ஆப் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்ப மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை முடிவு செய்துள்ளது.

இந்தியாவில் வாட்ஸ்ஆப் பயன்படுத்தும் பலருக்கும் சர்வதேச நம்பர்களிலிலிருந்து தேவையில்லாத அழைப்புகள் வந்தவண்ணம் உள்ளன. இந்த அழைப்புகளால் வாட்ஸ் ஆப் பயன்படுத்துவோர் பெரும் குழப்பமும் பீதியும் அடைந்துள்ளனர். இந்த சர்வதேச கால்களை யார் செய்வது, எதற்காக செய்கிறார்கள் என்று புரியவில்லை. 



பல்வேறு நம்பர்களிலிருந்து அடுத்தடுத்து கால்கள்  வருகின்றன.  ஒவ்வொரு அழைப்பும் வந்து வந்து கட் ஆகிறது. இவற்றை அட்டென்ட் செய்தால் அது நமது போனை ஸ்பாம் செய்து அதில் உள்ள டேட்டாக்களைத் திருடும் வாய்ப்புள்ளது. குறிப்பாக வங்கிக் கணக்கு உள்ளிட்டவை இருந்தால் நமது பணம் அபகரிக்கப்படும் வாய்ப்புகளும் உள்ளன. இதனால் மக்கள் பெரும் பீதியில் உள்ளனர்.

இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து தற்போது மத்திய அரசு  ஆக்ஷனில் குதித்துள்ளது. மர்மமான சர்வதேச கால்கள் குறித்து வாட்ஸ்ஆப் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் என்று மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கூறியுள்ளார். 

இதுகுறித்து அவர் கூறுகையில், டிஜிட்டல் ஊடகங்கள் அதன் பயன்பாட்டாளர்களின் தனிப்பட்ட உரிமைகளைப் பாதுகாக்கும் கடமையிலிருந்து தவற முடியாது. வாட்ஸ்ஆப் சர்வதேச கால்கள் விவகாரம் குறித்து ஆராய்ந்து வருகிறோம். விரைவில் இதுதொடர்பாக வாட்ஸ்ஆப் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் என்றார்.

பெரும்பாலான சர்வதேச கால்கள் இந்தோனேசியா (கோட் நம்பர் 62), வியட்நாம் (84), எத்தியோப்பியா (251), கென்யா (254), மலேசியா (60), அங்கோலா (244), அல்ஜீரியா (213) ஆகிய நாடுகளிலிருந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்