டெல்லி: 2025-26 ஆம் நிதியாண்டுக்கான நாடாளுமன்ற கூட்டத்தொடர் நாளை டெல்லியில் தொடங்க உள்ள நிலையில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது மத்திய அரசு.
2025-26 ஆம் நிதியாண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு நாளை அதாவது ஜனவரி 31ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 13ஆம் தேதி நிறைவடைகிறது. அதேபோல் இரண்டாவது அமர்வு மார்ச் பத்தாம் தேதி முதல் ஏப்ரல் 4 தேதி வரை நடைபெற உள்ளது.
இரு அவைகளின் உறுப்பினர்களும் பங்கேற்கும் இந்த கூட்டத்தொடரில் குடியரசுத் தலைவர் திரௌபதி மூர்மு உரையுடன் தொடங்குகிறது. இதனைத் தொடர்ந்து நாளை மறுநாள் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்கிறார். இந்தக் கூட்டத் தொடரில் ஒரே நாடு ஒரே தேர்தல், யூஜிசி வரைவுக் கொள்கை, வக்பு வாரிய திருத்த சட்டம், உள்ளிட்டவை குறித்து எதிர்க்கட்சிகள் பிரச்சினை எழுப்ப திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெறும் அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு ஒன்றிய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இந்த கூட்டத் தொடரை சுமூகமாக நடத்துவது தொடர்பாக ஆலோசிக்க இன்று அனைத்து கட்சி கூட்டத்திற்கு நாடாளுமன்ற விவகார துறை மந்திரி கிரண் ரிஜிஜு அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த கூட்டத்தில் பட்ஜெட் அறிவிப்புகள், நடப்பு ஆண்டில் நிறைவேற்றப்பட உள்ள மசோதாக்கள், எதிர் கட்சிகளின் ஒத்துழைப்பு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Today gold rate: வரலாறு காணாத தொடர் உயர்வில் தங்கம் விலை... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
வக்பு சட்டத்தை கண்டித்து.. கடை அடைப்பு போராட்டம் நெல்லையில் பரபரப்பு..!
கோடை விடுமுறையை மாணவர்கள் பயனுள்ள வகையில் கழிக்க வேண்டும்.. அமைச்சர் அன்பில் மகேஷ்..!
அது மட்டும் பண்ணாதீங்க...அமைச்சர்களுக்கு முதல்வர் கொடுத்த அட்வைஸ்
குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட முடியுமா..? குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் கேள்வி..!
good friday 2025 : புனித வெள்ளிக்கு ஏன் இந்த பெயர் வந்தது தெரியுமா?
என்னென்ன காயெல்லாமோ சாப்பிட்டிருப்பீங்க.. தோசைக்காய பப்பு டேஸ்ட் பண்ணிருக்கீங்களா..!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 18, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?
ஹஜ் ஒதுக்கீடு ரத்து...பிரதமர் தலையிட முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
{{comments.comment}}