கனடா வாழ் இந்தியர்களே கவனமா இருங்க.. அரசு அறிவுறுத்தல்

Sep 20, 2023,03:38 PM IST

டெல்லி: கனடாவில் வாழும் இந்தியர்களுக்கு எதிராக வெறுப்புணர்வு பரப்பப்படுவதால் அங்கு வசிக்கும் இந்தியர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது.


காலிஸ்தான் தீவிரவாதி ஒருவர் கொல்லப்பட்ட விவகாரத்தில் இந்திய அரசுக்குத் தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையிலான உறவிலும் விரிசல் விழுந்துள்ளது. இந்தியத் தூதரக அதிகாரியை கனடா அரசு வெளியேற்றி உத்தரவிட்டது. அதற்குப் பதிலடியாக கனடா தூதரக அதிகாரி ஒருவரை வெளியேறுமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.




இந்த நிலையில் காஷ்மீருக்குச் செல்வதை கனடா நாட்டவர்கள் தவிர்க்குமாறு அந்த நாட்டு வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தி உத்தரவு பிறப்பித்தது. இதற்குப் பதிலடியாக தற்போது இந்தியாவும் ஒரு அட்வைசரியை பிறப்பித்துள்ளது. அதன்படி கனடாவில் வசிக்கும் இந்தியர்களுக்கு எதிராக வெறுப்புணர்வு பரப்பப்படுவதால் கவனமாக இருக்க வேண்டும் என்று இந்தியர்களை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.


இதுதொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது. அதில், கனடாவில் இந்தியர்களுக்கு எதிராக வெறுப்புணர்வு பரப்பபடுகிறது. அரசியல் ரீதியிலான குற்றச் செயல்கள் அதிகரித்து வருகின்றன.  இந்தியர்களுக்கு எதிரான செயல்கள் அதிகரித்து வருவதால், அங்குள்ள இந்திய மக்கள், அங்கு சுற்றுலா செல்வோர் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.


சமீபத்தில் இந்தியத் தூதர்களுக்கு மிரட்டல்கள் விடுக்கப்பட்டன. இந்தியாவுக்கு எதிரான போக்குடன் செயல்படும் குறிப்பிட்ட பிரிவினருக்கு ஆதரவான போக்கும் காணப்படுகிறது.  எனவே இதுபோன்ற செயல்கள் நடைபெறும் வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்லும்போது இந்தியர்கள் கவனமுடன் இருக்க வேண்டும்.


இந்தியர்களின் நலன் குறித்து கனடா அதிகாரிகளுடன் இந்திய தூதரக அதிகாரிகள் தொடர்ந்து தொடர்பில் உள்ளனர். தற்போது நிலவும் பாதுகாப்பற்ற சூழல் காரணமாக இந்திய மாணவர்கள் மிகுந்த கவனத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். ஒட்டாவாவில் உள்ள இந்தியத் தூதரகத்திலும், டொரன்டோ, வான்கூவரில் உள்ள துணைத் தூதரகங்களில் இந்திய மாணவர்கள் தங்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். எதிர்பாராத, அசம்பாவித சம்பவங்கள் ஏதேனும் நேரிட்டால் உதவி செய்ய இது தோதுவாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

நல்லவன் வந்தா எரிச்சல்தானே வரும்.. இது பண்ணையார்களுக்கான கட்சி கிடையாது ப்ரோ.. விஜய் அதிரடி

news

விஜய் தமிழ்நாட்டின் நம்பிக்கை.. அடுத்த ஆண்டு ஆட்சியைப் பிடிப்பார்.. பிரஷாந்த் கிஷோர் பேச்சு

news

யார் பண்ணையார்?... விமர்சனங்களை அப்படியே திருப்பிப் போட்டு.. விஜய் கொடுத்த நச் பதில்!

news

பொய் சொல்லி தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் செய்கிறார் முதல்வர் ஸ்டாலின்.. உள்துறை அமைச்சர் அமித் ஷா

news

என்னை ஆஸ்தான பாடகியாக விஜய் அறிவிக்கட்டும்.. அப்புறம் பாருங்க.. கிடாக்குழி மாரியம்மாள் உற்சாகம்!

news

இனி என் செயல்பாடுகளும் கோட்பாடுகளும் தளபதி வழியில்.. தவெகவில் இணைந்த ரஞ்சனா நாச்சியார்!

news

தவெக ஆண்டு விழாவில் பிரசாந்த் கிஷோர்... இதை யாருமே எதிர்பார்க்கலியே... என்னவா இருக்கும்?

news

அனைத்துக் கட்சிக் கூட்டம்.. அதிமுக, தவெக, நாதக உள்பட 45 கட்சிகளுக்கு தமிழ்நாடு அரசு அழைப்பு!

news

தவெகவின் முதலாண்டு விழா கோலாகல தொடக்கம்.. பிரஷாந்த் கிஷோருடன் மேடை ஏறிய விஜய்

அதிகம் பார்க்கும் செய்திகள்