லேப்டாப், கம்யூட்டர்கள் இறக்குமதிக்கு இந்தியா தடை விதித்தது ஏன் ?

Aug 04, 2023,04:04 PM IST
டெல்லி : லேப்டாப், கம்யூட்டர், ஆல் இன் ஒன் பர்சனல் கம்யூட்டர், அல்ட்ரா ஸ்மால் கம்ப்யூட்டர், சர்வர்கள் ஆகியவற்றை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்வதற்கு இந்தியா தடை விதித்துள்ளது. இந்த தடை உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இதுவரை கம்ப்யூட்டர்கள், லேப்டாப்கள் சீனா மற்றும் கொரியாவில் இருந்தே இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இவற்றை இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கப்படுவதாக நேற்று மத்திய அரசு அறிவித்தது. ஏதாவது ஒரு நிறுவனம் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்து இந்தியாவில் லேப்டாப், கம்ப்யூட்டர் விற்பனை செய்ய வேண்டுமானால் மத்திய அரசிடம் அனுமதி பெற வேண்டும். 



வெளிநாட்டு வர்த்தக பொது இயக்குனரகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஏழு பிரிவுகளின் கீழ்  HSN code 8471 கொண்ட எலக்ட்ரானிக் கேட்ஜட்களுக்கு புதிய கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. Harmonised System of Nomenclature (HSN) code என்பது டேட்டா சேமிப்பு மிஷின்களை குறிப்பதாகும். டேட்டா சேகரிக்கும் கருவிகளை மட்டும் வெளிநாட்டில் இருந்து இ��க்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. சில குறிப்பிட்ட லேப்டாப், டேப்ளட் உள்ளிட்டவைகளுக்கு விலக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் விலக்கு அளிக்கப்பட்ட கருவிகளை இறக்குமதி செய்வதாக இருந்தால் போஸ்ட் அல்லது கூரியர் மூலம் மட்டுமே பெற வேண்டும். அவற்றிற்கு இறக்குமதி உள்ளிட்ட வரிகள் விதிக்கப்படும். டேட்டாக்களை பாதுகாப்பதற்காகவும், இந்த கருவிகளை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதற்கு ஊக்குவிப்பதற்காகவும் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 

இருந்தாலும் உள்நாட்டு ஐடி நிறுவனங்கள் லேப்டாப், கம்யூட்டர், டேப்லட் ஆகியவற்றை வெளிநாட்டு தரத்திற்கு இணையாக உற்பத்தி செய்ய துவங்குவதற்கு முன் இந்த பொருட்களின் விலை தாறுமாறாக ஏறும் அபாய நிலை ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்