Pan D, P 500 மாத்திரைகள் தரக்குறைவானவை.. மத்திய மருந்து கட்டுப்பாட்டுக் கழகம் பரபரப்பு அறிக்கை!

Sep 26, 2024,06:42 PM IST

சென்னை: பான் டி, பாராசிட்டமால் 500 உள்ளிட்ட 59 வகையான மாத்திரைகள் தரக்குறைவானவை என்று  தெரிய வந்துள்ளதாக மத்திய மருந்துக் கட்டுப்பாட்டுக் கழகத்தின் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


இந்த மாத்திரைகளை மக்கள் அதிக அளவில் பயன்படுத்துகிறார்கள் என்பதால் பரபரப்பு கூடியுள்ளது. இதுதவிர நீரிழிவு உள்ளிட்ட பல்வேறு முக்கிய நோய்களுக்காக  சாப்பிடும் மாத்திரைகளும் இந்தப் பட்டியலில் இடம் பெற்றிருப்பதால் மக்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது. 


இருப்பினும் இந்த 59 வகையான மாத்திரைகளைத் தயாரிக்கும் நிறுவனங்கள், சோதனைக்குட்படுத்தப்பட்ட மாத்திரைகள் போலியானவை என்றும் தங்களது தயாரிப்புகள் தரம் வாய்ந்தவை என்றும் மறுத்துள்ளன. 




வெளிநாடுகளில் டாக்டர்கள் கொடுக்கும் மருந்தைத்தான் நாம் பயன்படுத்த முடியும். மெடிக்கல் ஷாப்களில் போய் நம் இஷ்டத்திற்கு எந்த மாத்திரை, மருந்தையும் வாங்க முடியாது. ஆனால் நமது நாட்டில் அப்படி இல்லை. இங்கு டாக்டரிடம் போய் மருந்து வாங்கி சாப்பிடுபவர்களை விட கவுன்டர் சேல்ஸ் எனப்படும் மெடிக்கல் ஷாப்களில் போய் அவர்களே வாங்கி சாப்பிடுவோர்தான் அதிகம். வயிறு சரியில்லாவிட்டால், ஒரு பான் டி யை வாங்கி வாயில் போட்டு, நாலு ஏப்பம் வந்ததும், ஓகே இப்ப வயிறு சரியாகி விட்டது என்று நினைத்துக் கொண்டு பிறகு சாப்பிடுவோர் இங்கு ஆயிரக்கணக்கில் உள்ளனர்.


இந்த மாத்திரைகளையெல்லாம் பெரும்பாலானவர்கள் இஷ்டத்திற்கு சாப்பிடுவதும் வழக்கமாக உள்ளது. அப்படி மக்களால்  அதிகம் வாங்கப்படும் மாத்திரைகளாக பாராசிட்டமால், பான் டி உள்ளிட்டவை உள்ளன. அப்படிப்பட்ட மாத்திரைகள் தரம் குறைந்தவையாக உள்ளதாக மத்திய மருந்துக் கட்டுப்பாட்டுக் கழகம் அறிவித்திருப்பது மக்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.


இந்த 59 வகையான மாத்திரைகளில் பான் டி, பாராசிட்டமால் தவிர ஆன்டிபயாட்டிக்குகள், பிபி மாத்திரைகள், சர்க்கரை நோய் மாத்திரைகள், கால்சியம் மாத்திரைகள் ஆகியவையும் அடக்கம். மத்திய மருந்துக் கட்டுப்பாட்டுக் கழகத்தின் இந்த அறிக்கையால் தற்போது விற்பனையில் உள்ள மாத்திரைகளை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் விற்பனையிலிருந்து வாபஸ் பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தென் மாவட்டங்களுக்கு.. தீபாவளி சிறப்பு ரயில்கள் அறிவிப்பு.. புதன் காலை 8 மணிக்கு முன்பதிவு தொடக்கம்

news

பொது இடத்தில் கட்டுக்கடங்காத கோபம் வருதா.. கன்ட்ரோல் பண்ண முடியலையா.. இதைப் படிங்க!

news

குழந்தையின் தொப்புள் கொடியை இர்ஃபான் அறுத்த விவகாரம்.. போலீஸ் விசாரணை தொடங்கியது

news

மாமல்லபுரத்தில் செக்யூரிட்டியை சரமாரியாக தாக்கிய குடும்பம்.. 2 பெண்கள் உள்பட 3 பேர் அதிரடி கைது!

news

முதல்வரும், துணை முதல்வரும் எத்தனை முறை வந்தாலும்.. சேலம் அதிமுகவின் கோட்டை.. எடப்பாடி பழனிச்சாமி

news

தீபாவளி 2024 ஸ்பெஷல்.. அமுதம் அங்காடிகளில்.. ரூ. 499க்கு 15 பொருட்கள்.. அப்படியே செட்டா வாங்கலாம்!

news

BSNL லோகோ மாறிப் போச்சு.. அது மட்டுமா.. 7 புதிய சேவைகளும் அறிமுகம்!

news

64 சிசிடிவி கேமராக்கள்.. 7 பாதுகாப்பு கோபுரங்கள்.. தி.நகரில் தீயாய் வேலை செய்யும் சென்னை போலீஸ்!

news

என்ன நண்பா விக்கிரவாண்டிக்கு கிளம்பலாமா.. த.வெ.க. மாநாட்டு பணிகள் 90% முடிந்தன!

அதிகம் பார்க்கும் செய்திகள்