மணிப்பூர் பெண்கள் நிர்வாண  சம்பவம்.. விசாரணையைத் தொடங்கியது சிபிஐ

Jul 29, 2023,04:33 PM IST
டெல்லி: மணிப்பூரில் பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்ற சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை தொடங்கியுள்ளது.

மணிப்பூரில் கடந்த 3 மாதத்திற்கும் மேலாக  வன்முறை தலைவிரித்தாடி வருகிறது. 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். பல வீடுகள் எரிக்கப்பட்டு விட்டன. பெண்கள் மிகப் பெரிய அளவில் பாலியல் ரீதியாக கொடூரங்களுக்கு உட்படுத்தப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.



இந்த நிலையில்தான் சமீபத்தில் 2 பெண்களை நிர்வாணப்படுத்தி மிகக் குரூரமாக ஒரு ஆண் கும்பல் நடத்திய சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. பிரதமர் நரேந்திர மோடி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அனைத்துக் கட்சித் தலைவர்கள் என பலரும் இந்த கொடூரமான சம்பவத்தை கடுமையாக கண்டித்திருந்தனர்.

இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக சிலரை மணிப்பூர் போலீஸார் கைது செய்துள்ளனர். தற்போது இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.  தற்போது சிபிஐ விசாரணை தொடங்கி விட்டது. கடந்த மே மாதம் நடந்த இந்த சம்பவம் தொடர்பான விசாரணையை சிபிஐ தொடங்கியுள்ளதால் இதுகுறித்து மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என்று நம்பப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்