மாட்டுத் தீவன ஊழல் வழக்கு : லாலு பிரசாத்திற்கு சிபிஐ மனுத்தாக்கல்

Aug 18, 2023,12:13 PM IST
டில்லி : மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவிற்கு வழங்கப்பட்ட ஜாமினை எதிர்த்து சிபிஐ தரப்பில் புதிய மனு ஒன்று தாக்கல் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பீகார் முதல்வராக இருந்த போது ரூ.950 கோடி அளவிற்கு மாட்டு தீவனம் வாங்கிய விவகாரத்தில் ஊழல் செய்து அரசு பணத்தில் முறைகேடு செய்ததாக லாலு பிரசாத் மீது சிபிஐ பல்வேறு வழக்கு தொடர்ந்து. மாட்டு தீவன ஊழல் தொடர்பான சுமார் 4 வழங்குகளில் லாலு பிரசாத்திற்கு ஜாமின் வழங்கி ஜார்கண்ட் ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்தது. 



இந்த வழக்குகள் அனைத்திலும் லாலு பிரசாத் குற்றவாளி என தண்டனை பெற்றுள்ளார். இவர் மேல்முறையீடு செய்த மனுக்கள் பல்வேறு கோர்ட்களில் நிலுவையில் உள்ளன. இந்த சமயத்தில் அவருக்கு ஜாமின் வழங்கியது செல்லாது என எதிர்த்து சுப்ரம் கோர்ட்டில் சிபிஐ தரப்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை ஆகஸட் 25 ம் தேதி நடைபெறும் என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. 

ரயில்வே துறை அமைச்சராக இருந்த போது லாலு பிரசாத், அவரது மனைவி ராப்ரி தேவி, லாலு பிரசாத்தின் மகனும் பீகார் துணை முதல்வருமான தேவஸ்வி யாதவ் ஆகியோர் ரயில்வே துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி 2004 ம் ஆண்டு முதல் 2009 ம் ஆண்டு வரை ஏராளமானோரிடம் பல்வேறு நிலங்களை குறைந்த விலைக்கு வாங்கி முறைகேடு செய்ததாக கடந்த மாதம் சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. 

எதிர்க்கட்சிகள் அமைத்துள்ள கூட்டணியில் லாலு பிரசாத் யாதவ் தான் முக்கியமாக இருந்து செயல்பட்டு வருகிறார். மத்திய பாஜக அரசை வீழ்த்த வேண்டும் என தீவிரமாக செயல்பட்டு வரும் லாலு பிரசாத்திற்கு எதிராக சிபிஐ தனது பிடியை இறுக்கி வருவது தேசிய அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே எதிர்க்கட்சிகளுக்கு எதிராக மத்திய அரசு, சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையை ஆயுதமாக பயன்படுத்தி வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில் லாலு பிரசாத்திற்கு எதிரான சிபிஐ.,யின் இந்த புதிய மனு எதிர்க்கட்சிகளை கொந்தளிக்க வைத்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்