பெங்களூரில் பந்த்.. டெல்லியில் காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டம்

Sep 26, 2023,02:50 PM IST

டெல்லி: பெங்களூரில் பந்த் நடக்கிற பரபரப்பான சூழ்நிலையில் காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டம் டெல்லியில் நடந்தது. 


தமிழ்நாட்டுக்கு காவிரியில் இருந்து  தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து இன்று பெங்களூரில் பந்த் நடப்பது குறிப்பிடத்தக்கதாகும். கர்நாடகாவில் இருந்து தமிழகத்தில் காவிரி நீர் வருவது தொடர்பான பிரச்சனை தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.




காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுபடி தமிழகத்துக்கு 5 ஆயிரம் கனஅடி நீர் திறக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி கர்நாடகா தண்ணீர் திறந்து விட்டு வருகிறது. இதற்கு அங்கு கடும் எதிர்ப்பு உருவாகியுள்ள நிலையில் வருகின்ற 29ம் தேதி கர்நாடகா முழுவதும் பந்த் நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் தமிழகத்துக்கு தண்ணீர் வழங்க கூடாது என கர்நாடகா பாஜக, ஜேடிஎஸ், ஆம்ஆத்மி கட்சி தலைவர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இத்தகைய பரபரப்பான சூழலில் தான் இன்று காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இன்று காலை 11 மணிக்கு காணொளி வாயிலாக நடந்த கூட்டத்துக்கு காவிரி ஒழுங்காற்று குழு தலைவர் வினித் குப்தா தலைமை வகித்தார். 


தமிழ்நாட்டுக்கு கர்நாடகா 12500 கன அடி நீர் திறக்க வேண்டும் என காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு சார்பில் காவிரி தொழில்நுட்பக்குழு தலைவர் சுப்பிரமணியம் பங்கேற்றுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்