கேஷ் ஆப் நிறுவனர் பாப் லீ கத்தியால் குத்திக் கொலை.. சான் பிரான்சிஸ்கோவில் பயங்கரம்

Apr 06, 2023,10:49 AM IST
சான்பிரான்சிஸ்கோ:  கேஷ் ஆப் என்ற மொபைல் கட்டணம் செலுத்தும் ஆப்பை உருவாக்கியவரான பாப் லீ கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். சான்பிரான்சிஸ்கோவில் இந்த பயங்கர சம்பவம் நடந்துள்ளது.

உள்ளூர் நேரப்படி செவ்வாய்க்கிழமை அதிகாலை 2.35 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஒரு நபர் கத்தியால்  குத்தப்பட்ட நிலையில் இருப்பதாக வந்த தகவலைத் தொடர்ந்து போலீஸார் விரைந்து சென்றனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த பாப் லீயை மீட்டு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 



அதன் பின்னர் நடந்த விசாரணையில்தான் இறந்தவர் பாப் லீ என்று தெரியவந்தது.  பாப் லீ தற்போது கிரிப்டோ கரன்சி நிறுவனமான மொபைல்காய்ன் நிறுவனத்தின் தலைமை தயாரிப்பு அதிகாரியாக இருந்து வந்தார்.  பாப் லீயைக் கொன்றது யார் என்று தெரியவில்லை. இதுவரை அதுகுறித்த தகவல்களை போலீஸார் வெளியிடவில்லை.

பாப் லீ மிகவும் நல்ல மனிதர் என்று அவரது நிறுவன ஊழியர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். முன்பு கூகுள் நிறுவனத்திலும் பாப் லீ வேலை பார்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

தவெக மாநாடு.. அரை மணி நேரம், ஒரு மணி நேரம் இல்லை நண்பா.. 2 மணி நேரம் பேசப் போறாராம் விஜய்!

news

தேவர் ஜெயந்தி, மருதுபாண்டியர் நினைவு தினம்.. மதுரையில் 3 நாட்களுக்கு மதுக்கடைகள் மூடல்!

news

கந்த சஷ்டி விரதம் 2024 : கோவிலுக்குப் போகாமல்.. வீட்டிலேயே எளிமையாக விரதம் இருக்கும் முறை

news

கோர்ட்டுக்கு போகாமலேயே இனி விவாகரத்து வாங்கலாம்... சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு

news

கந்தசஷ்டி விழா 2024.. திருச்செந்தூர் முருகன் கோவிலுக்குப் போகும்.. பக்தர்களுக்கு அறைகள் ரெடி!

news

மாமா மாமா உன்னைத்தானே.. திண்ணையில் அமர்ந்து கீரை ஆய்ந்தபடி.. அசத்தலாக பாடும் பெண்!

news

35 வருஷமாக.. ஆனால் முதல் முறையாக இப்போது எனக்காக பிரச்சாரம் செய்கிறேன்.. பிரியங்கா காந்தி

news

வயநாடு இடைத்தேர்தல்.. ஆயிரக்கணக்கானோருடன் பேரணி.. பிரியங்கா காந்தி வேட்பு மனு தாக்கல்

news

சுவையான கொங்கு நாட்டு நெல்லிக்காய் தொக்கு.. சூப்பரா இருக்கும்.. செஞ்சு பாக்கலாமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்