Election of new Pope: புதிய போப்பாண்டவர் எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்?

Apr 21, 2025,06:37 PM IST

வாடிகன் சிட்டி: போப்பாண்டவராக இருப்பவர் மறைந்து விட்டால் புதிய போப்பாண்டவர் எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார் என்ற விவரம் வெளியாகியுள்ளது.


உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவராக வழிகாட்டியாக போற்றப்படும் போப்பாண்டவர் பதவியில் இருந்து வந்த போப் பிரான்சிஸ் காலமாகி விட்டார். இதையடுத்து புதிய போப்பாண்டவர் தேர்வு நடைபெறவுள்ளது. இந்த தேர்வு எப்படி நடைபெறும் என்பது குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.


புதிய போப்பைத் தேர்ந்தெடுக்கும் நிகழ்வு உலகளாவிய கவனத்தை ஈர்க்கிறது. இந்தத் தேர்தல் "கன்கிளேவ்" (Conclave) என்று அழைக்கப்படுகிறது.  புதிய போப்பாண்டவரை கர்டினால்கள்தான் தேர்வு செய்கிறார்கள். அதாவது அவர்களிலிருந்து ஒருவர்தான் புதிய போப்பாண்டவராக தேர்வு செய்யப்படுவார்.




கர்டினால்களின் கூட்டம்:


போப்பின் மறைவுக்குப் பிறகு, உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் கர்டினால்கள் வாடிகனில் உள்ள சிஸ்டைன் சிற்றாலயத்தில் கூடுகின்றனர். 80 வயதிற்குட்பட்ட கர்டினால்கள் மட்டுமே வாக்களிக்கும் உரிமையைப் பெறுகிறார்கள்.


கர்டினால்கள், சிஸ்டைன் சிற்றாலயத்தில், வெளி உலகத் தொடர்புகள் ஏதுமின்றி, ரகசியமாக வாக்களிக்கிறார்கள். ஒரு வேட்பாளர் மூன்றில் இரண்டு பங்கு வாக்குகளைப் பெறும் வரை, ஒவ்வொரு நாளும் நான்கு முறை வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது.


கவனம் ஈர்க்கும் புகைக் கூண்டு


வாக்கெடுப்புக்குப் பிறகு, வாக்குச்சீட்டுகள் எரிக்கப்படுகின்றன. இதுதான் முக்கியமானது. வெள்ளை புகை வந்தால், புதிய போப் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார் என்று பொருள். கருப்பு புகை வந்தால், வாக்கெடுப்பு தோல்வியடைந்தது என்று பொருள். எனவே புதிய போப்பாண்டவர் தேர்வை அறிய அனைவரின் கவனமும் இந்த புகைக் கூண்டு மீதுதான் இருக்கும்.


புதிய போப் தேர்ந்தெடுக்கப்பட்டதும், மூத்த கர்டினால் செயிண்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவின் பால்கனியில் இருந்து "ஹபேமஸ் பாபம்" என்று லத்தீன் மொழியில் அறிவிப்பார். அதாவது "நமக்கு ஒரு போப் வந்து விட்டார்" என்று பொருள். அதன் பின் புதிய போப், பால்கனியில் தோன்றி கூடியிருக்கும் மக்களுக்கு ஆசி வழங்குவார்.


இந்தத் தேர்தல் மிகவும் ரகசியமானது மற்றும் புனிதமானதாக கடைப்பிடிக்கப்படுகிறது. கர்டினால்களின் தனிப்பட்ட விருப்பங்களும், திருச்சபையின் எதிர்காலத்தைப் பற்றிய அவர்களின் கண்ணோட்டங்களும் இந்தத் தேர்தலில் முக்கிய பங்கு வகிக்கின்றன. திருச்சபையின் உலகளாவிய நிலை மற்றும் அதன் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கர்டினால்கள் வாக்களிப்பார்கள்.


திருச்சபையின் பழமையான மரபுகளை பின்பற்றி இந்த தேர்தல் நடக்கும். இந்த தேர்தல் கத்தோலிக்க திருச்சபையின் மிக முக்கியமான நிகழ்வுகளில் ஒன்றாகும், மேலும் இது உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான கத்தோலிக்கர்களின் கவனத்தை ஈர்க்கிறது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Summer Rains.. தமிழ்நாட்டில்.. அடுத்த ஒரு வாரத்திற்கு வெயில் + மழை.. இதாங்க நிலவரம்..!

news

Election of new Pope: புதிய போப்பாண்டவர் எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்?

news

மறைந்தார் போப்பாண்டவர் பிரான்சிஸ்.. வாடிகன் திருச்சபை அதிகாரப்பூர்வ அறிவிப்பு

news

2026 சட்டப்பேரவை தேர்தல்: டிசம்பருக்கு பின்னரே கூட்டணி குறித்து தவெக முடிவு?

news

Summer Jokes: மே முதல் கத்தரி வெயில்.. ம்க்கும்.. இப்ப மட்டும் வெண்டைக்காய் வெயிலா அடிக்குது...!

news

தொடர் சாதனை உச்சத்தில் தங்கம் விலை... அதிர்ச்சியில் இருந்து மீளமுடியாமல் மக்கள் தவிப்பு!

news

அர்ஜென்டினாவில் ரயில்வே தொழிலாளியின் மகனாக பிறந்து.. போப்பாண்டவராக உயர்ந்த.. பிரான்சிஸ்!

news

Monday Motivation... ஹாய் பிரண்ட்ஸ்.. நீங்க காலைல கண் விழிச்சதும் முதல்ல எதைத் தேடுவீங்க?

news

கோவையில் வரும் 26,27 தவெக கட்சியின் பூத் கமிட்டி கூட்டம்... விஜய் பங்கேற்பு!

அதிகம் பார்க்கும் செய்திகள்