சென்னை: பராமரிப்புப் பணி காரணமாக சென்னையில் புறநகர் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பயணிகளின் சிரமங்களை போக்க அந்த வழித்தடத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. இருப்பினும் பயணிகள் கூட்டம் அலைமோதுவதால் பஸ்களில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு அவதிக்குள்ளானார்கள்.
பராமரிப்புப் பணிக்காக இன்று முதல் 14ம் தேதி வரை சென்னை பல்லாவரம் - கூடுவாஞ்சேரி இடையே மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. காலை 10.30 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரையும், இரவு 10 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரையும், தாம்பரத்திற்கு ரயில்கள் செல்லாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை கடற்கரை முதல் பல்லாவரம் வரையும், செங்கல்பட்டு முதல் கூடுவாஞ்சேரி வரையும் மட்டுமே ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அந்த அறிவிப்பால் பொதுமக்கள் சிரமப்படுவதை தடுக்க, அந்த வழித்தடங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக போக்குவரத்துறை அறிவித்துள்ளது.பல்லாவரத்தில் இருந்து செங்கல்பட்டுக்கு கூடுதலாக 30 பேருந்துகளும், பல்லாவரத்தில் இருந்து கூடுவாஞ்சேரிக்கு கூடுதலாக 20 பேருந்துகளும் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.பயணிகள் சிரமத்தை குறைக்கும் விதத்தில் என்ன என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படுமோ அனைத்து நடவடிக்கைகளையும் போக்குவரத்து துறை செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இருப்பினும் ஆடிப் பெருக்கு, விடுமுறை நாட்கள் என்பதால் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. பஸ்களில் கூட்டம் கட்டி ஏறுவதால் மக்கள் அவதிக்குள்ளானார்கள்.
ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!
ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?
பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!
சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!
வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி
என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!
அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!
நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!
{{comments.comment}}