கொல்கத்தா: பாலியல் பலாத்கார வழக்கை விசாரித்த கொல்கத்தா உயர்நீதிமன்ற பெஞ்ச், பெண்கள் குறித்து தெரிவித்த கருத்துக்கள் விவாதத்தை எழுப்பியுள்ளன.
கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் ஒரு இளைஞர் அப்பீல் மனு செய்திருந்தார். பாலியல் பலாத்கார வழக்கில் அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யக் கோரிய வழக்கு அது. அந்த மனுவை நீதிபதிகள் சித்தரஞ்சன் தாஸ், பார்த்தா சாரதி சென் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்தது. விசாரணைக்குப் பின்னர் செஷன்ஸ் கோர்ட் அளித்த தீர்ப்பை ஹைகோர்ட் ரத்து செய்து உத்தரவிட்டது.
விசாரணையின்போது ஆண்களுக்கும், பெண்களுக்கும் சில அறிவுரைகளை நீதிபதிகள் கூறினர். அவர்கள் கூறியதாவது:
இளம் வயதில் செக்ஸ் உறவுகள் தொடர்பாக எழும் சட்ட ரீதியான பிரச்சினைகளைத் தவிர்க்க பள்ளிகளில் செக்ஸ் கல்வியை விரிவாக நடத்த வேண்டும்.
வளர் இளம் வயதில் செக்ஸ் என்பது இயல்பானதுதான். ஆனால் செக்ஸ் உணர்வுகள் எழுவதை கட்டுப்படுத்த வேண்டும். அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, அவரவர் நடந்து கொள்வதைப் பொறுத்துதான் இது இருக்கிறது.
பெண்கள் தங்களது செக்ஸ் உணர்வுகளை கட்டுப்படுத்த வேண்டும். இரண்டு நிமிட சுகத்திற்காக அதை கட்டுப்படுத்தாமல் இருக்கக் கூடாது. சமூகத்தின் பார்வையில் பெண்களைத்தான் குறை சொல்வார்கள். இதைத் தவிர்க்க, அந்த இரண்டு நிமிடத்தில் ஏற்படக் கூடிய சந்தோஷத்தை மனதில் கொண்டு உங்களை இழந்து விடக் கூடாது.
தங்களது உடம்பையும், கண்ணியத்தையும், சுய மதிப்பையும் பெண்கள்தான் பாதுகாக்க வேண்டும். அதன் மீதான உரிமையை விட்டுக் கொடுத்து விடக் கூடாது.
பெண்களின் கண்ணியத்தை ஆண்கள் மதிக்க வேண்டும். பெண்களை மதிக்கும் வகையில் தங்களது மனங்களை பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும். பெண்களின் சுய மதிப்பு, அவரது உடல் மீதான உரிமை, தனிப்பட்ட அந்தரங்கம் ஆகியவற்றை ஆண்கள் மதிக்க வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
நீதிபதிகளின் கருத்துக்கள் தற்போது விவாதங்களை எழுப்பியுள்ளன.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்பா..? வானிலை மையம் விளக்கம்!
நீட் எதிர்ப்பு என்பது... முதல்வர் ஆடும் சுயநல நாடகம்: பாஜக தலைவர் அண்ணாமலை!
இரத்தக்களறி (சிறுகதை)
4 நாட்களுக்கு பின்னர் இன்று மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை... சவரனுக்கு ரூ.520 உயர்வு!
நன்றி அப்பா.. மகிழ்ச்சியோடு போய் வாருங்கள்.. குமரி அனந்தன் குறித்து டாக்டர் தமிழிசை உருக்கம்!
இலக்கியச் செல்வர்.. காங்கிரஸ் மூத்த தலைவர்.. காமராஜரின் சிஷ்யர்.. மறைந்தார் குமரி அனந்தன்!
மதுரை குலுங்க.. வைகை ஆற்றில் கள்ளழகர்.. வந்திறங்க போறாரு.. வெளியானது தேதி!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 09, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?
தோனி அதிரடி.. கடைசி நேர போராட்டம் வீண்.. மீண்டும் ஒரு தோல்வி.. ஏமாற்றத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்