Global investors meet: ஒசூரில் ரூ.7000 கோடி முதலீடு செய்கிறது டாடா நிறுவனம்!

Jan 06, 2024,06:33 PM IST

ஓசூர்:  ஓசூரில் iphone உதிரிபாக தயாரிப்பு தொழிற்சாலை விரிவாக்கத்திற்கு டாட்டா நிறுவனம் ரூ.7000 கோடியை முதலீடு செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஐ போன் உதிரிபாகங்களை இந்தியாவிலேயே தயாரிப்பதற்கான முதல் இந்திய நிறுவனமாக கடந்த நவம்பர் மாதம் டாடா எலக்ட்ரானிக் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது. தற்போது ஒசூரில் ஐ போன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், கூடுதலாக 7000 கோடி ரூபாயில் புதிய யூனிட் அமைக்க டாடா நிறுவனம் முடிவு செய்துள்ளது.


ஓசூரில் உள்ள டாட்டா எலக்ட்ரானிக் பிரைவேட் லிமிடெட் ஆலையை விரிவாக்கம் செய்ய உள்ளது. இதனால் அடுத்த ஆறு ஆண்டுகளில் 30 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பு நாளை சென்னை நந்தம்பாக்கத்தில் தொடங்கும் உலக முதலீட்டாளர் மாநாட்டில் வெளியிடப்படுகிறது. 




ஜனவரி 7 மற்றும் 8ம் தேதிகளில் சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறவுள்ளது. இதற்கான பணிகள் அனைத்தும் முடிந்து விட்டது. பல்வேறு நாடுகள் இதில் பங்கேற்கின்றன. அவற்றுக்கான அரங்கங்கள் அமைக்கப்பட்டு விட்டன.


நாளை காலை தொடக்க விழா நடைபெறுகிறது. தமிழக தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வரவேற்றுப் பேசுகிறார். முதலமைச்சர் மு.கஸ்டாலின் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றுவார். மத்திய ஜவுளி, வர்த்தக தொழில் துறை அமைச்சர் பியூஷ்கோயல் சிறப்பு விருந்தினராக  கலந்து  கொள்ளவுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்