டில்லி : 2024-2025ம் நிதியாண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 01ம் தேதி தாக்கல் செய்ய உள்ளார்.
தேர்தல் நெருங்கிக் கொண்டிருப்பதால் இது இடைக்கால பட்ஜெட் தான் என்றாலும், பாஜக நடப்பு ஆட்சி காலத்தில் தாக்கல் செய்யும் நிறைவான பட்ஜெட் என்பதால் அனைத்து தரப்பிலும் எதிர்பார்ப்பு பலமடங்கு அதிகரித்துள்ளது.
2024ம் ஆண்டு லோக்சபா தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெறும் என்பதால் தேர்தல் விதிமுறைகளை மனதில் கொண்டு இந்த இடைக்கால பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. புதிய அரசு ஆட்சி அமைத்த பிறகு இந்த ஆண்டின் ஜூலை மாதத்தில் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் நடைபெற உள்ளதால் இந்த பட்ஜெட்டில் அதிக நிதி ஒதுக்க முடியாது. அதே போல் வரி மாற்றம், அரசு கொள்கைகள் ஆகியவற்றில் மாற்றம் செய்ய முடியாது.
இருந்தாலும் 5.5 சதவீதம் உள்நாட்டு உற்பத்தி, 15 சதவீதம் வளர்ச்சி ஆகியவற்றை மனதில் வைத்து நிர்மலா சீதாராமன் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்வார் என சொல்லப்படுகிறது. உற்பத்தி துறையில் வளர்ச்சி, சாலை மற்றும் ரயில்வேறு திட்டங்கள், வேளாண் துறைகள், கீழ்தட்டு மக்களை முன்னேற்றுவதற்கு, பெண்கள் முன்னேற்றம், உற்பத்தி, பசுமை தொழில்நுட்பம் ஆகியவற்றில் அதிகம் செலுத்தி இந்த பட்ஜெட் தயார் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மருந்து மற்றும் மருத்துவ துறை சார்ந்த திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல் இளைஞர் திறன் மேம்பாட்டு திட்டங்கள், ஸ்டார்ட் அப் இந்தியா துறையில் அதிக முதலீடுகளை ஈர்க்கும் வகையில் திட்டங்கள் கொண்டு வரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சுகாதாரத்துறையிலும் புதிய திட்டங்கள் கொண்டு வரப்படலாம் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
வக்பு வாரிய சட்ட மசோதா நாளை தாக்கல்.. எதிர்த்து வாக்களிக்க இந்தியா கூட்டணி எம்.பிக்கள் முடிவு
தமிழ்நாட்டில் வெப்பநிலை படிப்படியாக ..2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்..!
வழக்கத்தைவிட.. ஏப்ரல், ஜூனில் வெப்பம் அதிகரிக்கும்.. இந்திய வானிலை மையம் எச்சரிக்கை..!
Emburan Movie: பெரியாறு அணை குறித்து அவதூறு கருத்துகளை நீக்குக.. பண்ருட்டி வேல்முருகன்..!
Madurai Chithirai Thiruvizha 2025: மீனாட்சி அம்மன் கோவிலில்..ஏப்ரல் 29ல் கொடியேற்றத்துடன் தொடக்கம்..
அருவறுப்பான ஆண்களே அழிஞ்சு நாசமா போங்க.. பாடகி சின்மயி ஆவேசம்!
கும்பகோணம் வெற்றிலைக்கும் தோவாளை மாணிக்க மாலைக்கும் புவிசார் குறியீடு!
டி.என்.பி.எஸ்.சி குரூப்-1 தேர்வு.. ஏப்ரல் 30 வரை விண்ணப்பிக்கலாம்.. வெளியானது அரசு உத்தரவு..!
தமிழகத்தில் ஆட்சி அமைப்போம்.. அமித்ஷா கூறியது நகைச்சுவை:விசிக தலைவர் திருமாவளவன்!
{{comments.comment}}