எதுக்கு டிகிரியெல்லாம் படிச்சுட்டு.. வேஸ்ட்.. பஞ்சர் கடை வைங்க... பாஜக எம்.எல்.ஏ. பேச்சால் சர்ச்சை!

Jul 16, 2024,05:16 PM IST

போபால்:  கல்லூரியில் படித்து வாங்கும் பட்டங்களால் எந்த பயனும் இல்லை என்பதை மாணவர்கள் மனதில் கொள்ள வேண்டும். ஒரு பைக் பழுதுபார்க்கும் கடையை நடத்தி வாழ்க்கையில் பிழைக்க கற்றுக்கொள்ள வேண்டும் என்று பாஜக எம்.எல்.ஏ., பன்னாலால் ஷக்யா என்பவர் பேசியுள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.


மத்திய பிரதேசத்தில் உள்ள 55 மாவட்டங்களில் பிஎம் காலேஜ் ஆப் எக்ஸலன்ஸ் கல்லூரிகளை இந்தூரில் இருந்து காணொளி காட்சி வாயிலாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திறந்து வைத்தார். அந்த விழாவில், குணா தொகுதி பாஜக எம்.எல்.ஏ பன்னாலால் ஷக்யா பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது பேச்சிலிருந்து:


நான் சொல்வதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். டிகிரியால் எந்த பயனும் இல்லை. அதற்கு பதிலாக, வாழ்வாதாரத்தை ஓட்ட ஒரு மோட்டார் சைக்கிள் பஞ்சர் பழுது பார்க்கும் கடையை திறந்து வைத்துக் கொள்ளுங்கள். நாங்கள் இன்று பிஎம் எக்ஸலன்ஸ் கல்லூரியை திறக்கிறோம். இந்த கல்லூரி பட்டங்களால் எதுவும் நடக்கப் போவதில்லை என்பதை மனதில் வைத்துக் கொள்ளுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.




மாசு மற்றும் சுற்றுச்சூழல் குறித்துக் கவலை உள்ளது. ஆனால் யாரும் பஞ்ச பூதங்களை பாதுகாக்கும் திசையில் செயல்படுவதில்லை. முதன் முதலில் மனித உடலில் ஆதாரமான பஞ்சபூதங்களை காப்பாற்ற முயற்சிக்க வேண்டும். இன்று நாம் நட்ட மரங்களை எவ்வளவு காலம் பாதுகாப்போம். ஆறுகள் மற்றும் வடிகால்களில் உள்ள அரசு நிலங்களில் பரவலாக ஆக்கிரமிப்பு நடக்கிறது. பக்க விளைவுகளைப் பற்றி கவலைப்படாமல் மக்கள் எதையும் சாப்பிடுகிறார்கள் என்று கூறியுள்ளார்.


உள்துறை அமைச்சர் விழாவிலேயே அதுவும் கல்லூரித் திறப்பு விழாவிலேயே இதெல்லாம் வேஸ்ட் என்று பாஜகவைச் சேர்ந்த எம்எல்ஏ பேசியது பெரும் பரபரப்பையும், சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


மத்தியப் பிரதேச எதிர்க்கட்சிகள் பன்னாலாலின் பேச்சை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.


பெண்களுக்கு குயுக்தியான அட்வைஸ் கொடுத்தவர்:


பன்னாலால் இதுபோல பேசுவது முதல் முறையல்ல. இதற்கு முன்பு பெண்களுக்கு குயுக்தியான அட்வைஸ் கொடுத்தவர்தான் பன்னாலால். முன்பொருமுறை அவர் பேசுகையில், பெண்கள் பாய் பிரண்டு வைத்துக் கொள்ளக் கூடாது. சமூகத்திற்கு பயன் உள்ள பிள்ளைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும். அது முடியாவிட்டால் பிள்ளையே பெற்றுக் கொள்ளக் கூடாது என்று கூறியிருந்தார்.


அதேபோல விராட் கோலியின் தேசபக்தி குறித்தும் கேள்வி கேட்டு சர்ச்சையை ஏற்படுத்தியவர்தான் நம்முடைய பன்னாலால் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்