தமிழ்நாடு பாஜக புதிய மாவட்டத் தலைவர்கள் நியமனம் .. இலக்குடன் செயல்பட அண்ணாமலை வாழ்த்து

Jan 19, 2025,07:19 PM IST

சென்னை: தமிழ்நாடு பாஜகவில் புதிய மாவட்டத் தலைவர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. முதல் கட்டப் பட்டியலில் சில மாவட்டத் தலைவர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு மாநிலத் தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.


தமிழ்நாடு பாஜகவில் நிர்வாக ரீதியாக 67 மாவட்டங்கள் உள்ளன. இவற்றுக்கு புதிய தலைவர்களைத் தேர்ந்தெடுக்கும் பணியும், உறுப்பினர் சேர்க்கையும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கியது. பல்வேறு கட்டங்களாக நடந்து வந்த தேர்தல் தற்போது இறுதிக் கட்டமாக மாவட்டத் தலைவர்கள் தேர்வு நடந்து முடிந்துள்ளது.


அதில்  முதல் கட்டமாக சில மாவட்டங்களுக்குத் தலைவர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அந்தப் பட்டியல் வருமாறு:




திருவள்ளூர் கிழக்கு -சுந்தரம்

காஞ்சிபுரம் – ஜெகதீசன்

செங்கல்பட்டு தெற்கு – மருத்துவர் பிரவீன் குமார்

திருப்பத்தூர் – எம் தண்டாயுதபாணி

கடலூர் மேற்கு –  க.தமிழழகன்

கடலூர் கிழக்கு –  கிருஷ்ணமூர்த்தி

அரியலூர்- டாக்டர்.பரமேஸ்வரி

சேலம் – சசிகுமார்

நாமக்கல் மேற்கு – ராஜேஷ் குமார்

நாமக்கல் கிழக்கு – சரவணன்

நீலகிரி – தர்மன்

திருச்சி – ஒண்டிமுத்து

மயிலாடுதுறை – நாஞ்சில் கே.பாலு

தேனி -ராஜபாண்டியன்

சிவகங்கை – பாண்டித்துரை

திண்டுக்கல் கிழக்கு –  முத்துராமலிங்கம்

திருநெல்வேலி – முத்து பலவேசம்

தென்காசி  – ஆனந்தன் அய்யாசாமி

விருதுநகர் கிழக்கு –  பென்டகன் ஜி பாண்டுரங்கன்

கன்னியாகுமரி மேற்கு  – ஆர் டி சுரேஷ்

கன்னியாகுமரி கிழக்கு – கோப்பு குமார்


அண்ணாமலை வாழ்த்து




புதிய மாவட்டத் தலைவர்களுக்கு மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி  அவர்கள் மற்றும்  பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா  அவர்கள் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு பாஜக  புதிய மாவட்டத் தலைவர்களாகப் பொறுப்பேற்றிருக்கும் அனைவருக்கும், மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


தேசப் பணிகளிலும், மக்கள் பணிகளிலும் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு, தமிழகத்தில், நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, அவர்கள் வழிகாட்டுதலின்படி நல்லாட்சியைக் கொண்டு வரவும், வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை நோக்கி, நமது தமிழகத்தைக் கொண்டு செல்லவும், அயராது உழைக்க வேண்டும் என்று அனைவரையும் அன்போடு கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Chennai Super Kings அணியில் Baby AB.. குர்ஜாப்னீத் சிங்கிற்கு பதிலாக டெவால்ட் ப்ரீவிஸ்!

news

அமித்ஷா அல்ல.. எந்த ஷா வந்தாலும்.. ஒரு கை பார்ப்போம்.. முதல்வர் மு க ஸ்டாலின் சவால்!

news

கூட்டணி அழைப்புக்கு நன்றி.. எங்கள் பயணம் எங்கள் கால்களை நம்பிதான்... கூட்டணி குறித்து சீமான் பதில்!

news

தயவு செய்து அவதூறு பரப்புவதை நிறுத்துங்க.. நடிகர் ஸ்ரீயின் குடும்பத்தினர் வேண்டுகோள்..!

news

கோடை விடுமுறையை மாணவர்கள் பயனுள்ள வகையில் கழிக்க வேண்டும்.. அமைச்சர் அன்பில் மகேஷ்..!

news

அது மட்டும் பண்ணாதீங்க...அமைச்சர்களுக்கு முதல்வர் கொடுத்த அட்வைஸ்

news

குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட முடியுமா..? குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் கேள்வி..!

news

பூஜ்ஜிய நிழல் தினம்... பொதுமக்களுக்கு அறிவியல் விழிப்புணர்வு ஏற்படுத்திய பள்ளி மாணவர்கள்!

news

குழாய் மூலம் வீடுகளுக்கு எரிவாயு வழங்கும் திட்டம்... 9 மாவட்டங்களுக்கு அனுமதி!

அதிகம் பார்க்கும் செய்திகள்