இரவு 10 மணிக்கு மேல் பிரச்சாரம் செய்த அண்ணாமலை... பாஜக-திமுக தள்ளுமுள்ளுவால் 7 பேர் காயம்

Apr 12, 2024,12:13 PM IST
கோவை : கோவை லோக்சபா தொகுதி வேட்பாளரும், தமிழக பாஜக மாநில தலைவருமான அண்ணாமலை இரவு 10 மணிக்கு மேல் பிரச்சாரம் செய்ததற்கு திமுக.,வினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இரு தரப்பினருக்கும் ஏற்பட்ட மோதலில் 7 பேர் காயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் லோக்சபா தேர்தல், ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் தேர்தல் சூடுபிடித்துள்ளது. கோடை வெயிலை மிஞ்சும் அளவிற்கு அனல் பறக்கும் பிரச்சாத்தில் வேட்பாளர்களும், அவர்களின் கட்சி தலைவர்களும் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் பிரச்சாரம் ஏப்ரல் 16ம் தேதியுடன் நிறைவடைய உள்ளதால் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இரவு 10 மணிக்கு மேல் தேர்தல் பிரச்சாரம் செய்யக் கூடாது என்ற விதிமுறை உள்ளது.



ஆனால் பாஜக வேட்பாளரான அண்ணாமலை, தேர்தல் விதிமுறைகளை மீறி இரவு 10 மணிக்கு மேல் பிரசாரம் செய்ததாக சொல்லப்படுகிறது. இதற்கு திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக ஆவாரம்பாளையம் பகுதியில் திமுக தொண்டர்களுக்கும், பாஜக தொண்டர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் 7 பேர் வரை காயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இந்த சம்பவம் தொடர்பாக விசாரித்ததில், அண்ணாமலை மாலை 4 மணிக்கு பிரச்சாரத்தை துவங்குவதற்கு பதிலாக 3 மணி நேரம் தாமதமாக இரவு 7 மணிக்கு தான் துவங்கி உள்ளார். இதன் காரணமாக தான் இரவு 10.45 வரை அவர் பிரச்சாரம் செய்ததாக சொல்லப்படுகிறது. 

தமிழகத்தில் கடந்த முறை அதிமுக.,வுடன் கூட்டணி வைத்து போட்டியிட்ட பாஜக, இந்த முறை தனித்து களம் காண்கிறது. கோவையில் பாஜக அண்ணாமலையை எதிர்த்து அதிமுக சார்பில் சிங்கை ராமச்சந்திரனும், திமுக சார்பில் கணபதி ராஜ்குமாரும் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர். கோவை தொகுதியில் தான் வரலாறு காணாத ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற உள்ளதாகவும், ஜூன் 04ம் தேதி தமிழகத்தில் பாஜக.,வின் ஓட்டு வங்கி அதிகரித்திருப்பதையும் அனைவரையும் காண முடியும் என்றும் அண்ணாமலை நம்பிக்கையுடன் கூறி வருகிறார்.

சமீபத்திய செய்திகள்

news

மதுரையை வச்சு செய்யும் வெயில்.. மேலும் சில நாட்கள் வெளுக்குமாம்.. அதிகரிக்கவும் வாய்ப்பு.. கேர்ஃபுல்

news

காட்டுத் தீயாய் பரவிய துணை முதல்வர் வதந்தி.. சிரித்துக் கொண்டே பதிலளித்த உதயநிதி ஸ்டாலின்!

news

ஜிம்பாப்வேயை உலுக்கும் பஞ்சம்.. அதை விரட்ட அரசு எடுத்த முடிவு.. .. அதிர்ச்சியில் நாடுகள்!

news

ஒரே நாடு ஒரே தேர்தல்.. ராம்நாத் கோவிந்த் குழு பரிந்துரைகளை ஏற்றது மத்திய அமைச்சரவை!

news

அழகாய் பூத்தது.. நீலகிரியில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும் நீலக்குறிஞ்சி சீசன் தொடங்கியது!

news

Thalaivettiyan Palayam: ஜிபி முத்து கொடுத்த சூப்பர் ஐடியாஸ்.. கூலாக கேட்டுக் கொண்ட அபிஷேக் குமார்!

news

"பாட்டி கதியே உங்களுக்கும்".. ராகுல்காந்திக்கு பாஜக தலைவர் மிரட்டல்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

news

தீபாவளி ரஷ்ஷை சமாளிக்க.. தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுக்கும் தமிழக அரசு!

news

மீன்வளப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா.. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் புறக்கணித்தார்!

அதிகம் பார்க்கும் செய்திகள்