சென்னை : விளவங்கோடு சட்டசபை இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளராக நந்தினி என்பவரின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் போட்டியிட, சமீபத்தில் காங்கிரசில் இருந்து விலகி, பாஜக.,வில் இணைந்த விஜயதாரணிக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு சீட் அளிக்காமல் பாஜக மறுத்துள்ளது.
தமிழ்நாட்டில் 39 லோக்சபா தொகுதிகளுக்கு பொதுத்தேர்தல் நடைபெறும் அதே வேளையில் அதே ஏப்ரல் 19ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. விளவங்கோடு சட்டசபை தொகுதி உறுப்பினராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த விஜயதாரணி இருந்து வந்தார். இந்த நிலையில் அவர் சமீபத்தில் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு கட்சியிலிருந்து விலகி பாஜகவில் வந்து இணைந்தார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
விஜயதாரணிக்கு கன்னியாகுமரி லோக்சபா தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு அளிக்கப்படும் என்று பெரும் எதிர்பார்ப்பு நிலைமை இருந்து வந்தது. இந்த நிலையில் சமீபத்தில் வெளியான பாஜக வேட்பாளர் பட்டியலில் கன்னியாகுமரி தொகுதியில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் விஜயதாரணி ஏமாற்றம் அடைந்தார். சரி, விளவங்கோடு சட்டசபை இடைத் தேர்தலில் விஜயதாரணிக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில் இன்று அறிவிக்கப்பட்ட விளவங்கோடு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலில் விஜயதாரணியின் பெயர் இடம் பெறவில்லை. அவருக்கு பதில் நந்தினி என்பவரின் பெயர் இடம் பெற்றுள்ளது.
இதனால் லோக்சபா தொகுதியும் கிடைக்காமல், சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பும் கிடைக்காமல் விஜயதாரணி ஓரம் கட்டப்பட்டுள்ளார். அவர் ஏன் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார்? ஏன் பாஜகவில் வந்து இணைந்தார்? என்பதற்கே இதுவரை விடை தெரியாமல் இருந்து வருகிறது. இப்பொழுது லோக்சபா தேர்தலிலும் அவருக்கு சீட் கொடுக்கப்படவில்லை, சட்டசபை இடைத்தேர்தலும் சீட் கொடுக்கப்படவில்லை என்பதால் அவரது தரப்பு கடும் அதிர்ச்சியும் ஏமாற்றமும் அடைந்துள்ளது.
விஜயதாரணியின் கட்சி தாவலுக்கான நோக்கம் என்ன என்பதும் பெரும் கேள்விக்குறியாகி உள்ளது . விஜயதாரணி இனி என்ன முடிவு எடுப்பார் என்பது தெரியவில்லை. பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
மதுரையை வச்சு செய்யும் வெயில்.. மேலும் சில நாட்கள் வெளுக்குமாம்.. அதிகரிக்கவும் வாய்ப்பு.. கேர்ஃபுல்
காட்டுத் தீயாய் பரவிய துணை முதல்வர் வதந்தி.. சிரித்துக் கொண்டே பதிலளித்த உதயநிதி ஸ்டாலின்!
ஜிம்பாப்வேயை உலுக்கும் பஞ்சம்.. அதை விரட்ட அரசு எடுத்த முடிவு.. .. அதிர்ச்சியில் நாடுகள்!
ஒரே நாடு ஒரே தேர்தல்.. ராம்நாத் கோவிந்த் குழு பரிந்துரைகளை ஏற்றது மத்திய அமைச்சரவை!
அழகாய் பூத்தது.. நீலகிரியில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும் நீலக்குறிஞ்சி சீசன் தொடங்கியது!
Thalaivettiyan Palayam: ஜிபி முத்து கொடுத்த சூப்பர் ஐடியாஸ்.. கூலாக கேட்டுக் கொண்ட அபிஷேக் குமார்!
"பாட்டி கதியே உங்களுக்கும்".. ராகுல்காந்திக்கு பாஜக தலைவர் மிரட்டல்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
தீபாவளி ரஷ்ஷை சமாளிக்க.. தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுக்கும் தமிழக அரசு!
மீன்வளப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா.. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் புறக்கணித்தார்!
{{comments.comment}}