வெயிலில் வறுபடும் வட இந்தியா.. அதீத வெப்பத்தால் மயங்கி விழுந்த மாணவிகள்.. எங்கு தெரியுமா?

May 29, 2024,06:03 PM IST

பாட்னா: பீகாரில் கடும் வெப்ப அலை வீசிவருவதால் பள்ளி சென்ற மாணவிகள் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.


தமிழகத்தை கடந்த சில நாட்களுக்கு முன்னர் வாட்டி வதைத்த வெப்பம், தற்போது இந்தியாவின் மேற்கு மற்றும் வடக்கு பகுதிகளில் கடுமையாக உள்ளது. இந்த வெப்பத்தினால் மக்கள் வீட்டை விட்டு வெளியில் வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த வெப்பத்தினால் மக்கள் வெளியில் வர வேண்டாம் என்று அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.




டெல்லியில் கடும் வெயில் வெளுத்து வருகிறது. அங்கெல்லாம் 120 டிகிரி அளவுக்கு வெயில் கொளுத்திக் கொண்டுள்ளது. பெரும்பாலான வட மாநிலங்களில் கடுமையான வெப்ப அலை வீசி வருவதால் மக்கள் தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.


பீகார் மாநிலம் ஷேக்புரா மாவட்டத்தில் உள்ள அரியாரி பிளாக்கில் உள்ள மன்கவுல் நடுநிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் இன்று காலை இறை வணக்க கூட்டம் நடந்தது. இந்த நிகழ்விற்காக மாணவர்கள் அனைவரும் ஒன்று கூடியிருந்தனர். அப்போது காலை வேலையிலேயே வெயில் அதிகம் அடித்ததால், இறைவணக்கம் செய்து கொண்டிருந்த 7 மாணவர்கள் ஒன்றன் பின் ஒன்றாக மயங்கி கீழே விழுந்தனர். இதனால் அங்கு சற்று நேரத்திற்கு பரபரப்பு ஏற்பட்டது.


மயங்கி விழுந்த மாணவர்களுக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பின்னர்  7 பேரும் ஷேக்புராவில் உள்ள சதர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இது தொடர்பாக சதார் மருத்துவமனை டாக்டர் கூறுகையில், வெப்பநிலை அதிகரித்ததால் மாணவிகள் கடினமான நிலையை எதிர்கொண்டனர். அவர்கள் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நல்ல நிலையில் உள்ளனர். வெப்பம் காரணமாக உடலில் இருந்து வியர்வை மூலம் அதிக அளவில் நீர் வெளியேறும் என்பதால், அதிக அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்