இஸ்ரேலின் உரிமைகளை மதிக்கும் அதே நேரம்.. பாலஸ்தீனியர்களுக்கும் தீர்வு தேவை.. ஒபாமா

Oct 10, 2023,01:33 PM IST

வாஷிங்டன்: உலக நாடுகள் பலவும் இஸ்ரேலின் உரிமைகளைப் பற்றி மட்டுமே பேசிக் கொண்டுள்ள நிலையில், பாலஸ்தீனியர்களின் நிலை குறித்தும் கவலை தெரிவித்துள்ளார் அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா.


இஸ்ரேல் - பாலஸ்தீன யுத்தம் பல ஆண்டு காலமாக முடிவே இல்லாமல் நீண்டு கொண்டிருக்கும் கதை. பாலஸ்தீன வரலாறு தெரியாமல் இன்று பலரும் இஷ்டத்துக்கு கதை விட்டுக் கொண்டுள்ளனர், தங்களது ஆதரவு நிலைப்பாடுகளை தப்புத் தப்பாக எடுத்துக் கொண்டுள்ளனர். இந்தியாவிலேயே கூட பலருக்கு உண்மை நிலவரம் தெரியவில்லை.




ஹமாஸ் போராளிகள் அமைப்பு நடத்திய திடீர் தாக்குதலுக்கு பழிவாங்குவதாக கூறி, அவர்களை அழிப்பதாக கூறி பாலஸ்தீனத்தையே அழிக்க இறங்கி விட்டது இஸ்ரேல். காஸா நகரை குண்டு வீச்சாலும், ராக்கெட் வீச்சாலும் சின்னாபின்னமாக்கி வருகிறது இஸ்ரேலிய படைகள்.. அடுத்து ராணுவம் உள்ளே புகுந்து மொத்த காஸா நகரையும் தன் வசம் எடுக்கும் முஸ்தீபுகளில் இறங்கியுள்ளது.


இந்த நிலையில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக எழும் குரல்களையும் பலர் முடக்கி ஒடுக்கி விடுகிறார்கள். இந்தப் பின்னணியில் பாலஸ்தீனம் குறித்தும் அமெரிக்காவிலிருந்து ஒரு குரல் வெளிப்பட்டுள்ளது. அது பராக் ஒபாமாவின் குரல்.


பராக் ஒபாமா ஒரு டிவீட் போட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:


இஸ்ரேல் மீதான மோசமான தீவிரவாதத் தாக்குதல் அத்தனை அமெரிக்கர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கோபப்படுத்தியுள்ளது.  அப்பாவி பொதுமக்களை தீவிரவாதிகள் கொன்ற செயலை ஏற்கவே முடியாது. இறந்தவர்களுக்காக நாம் இரங்கல் தெரிவிக்கிறோம். அவர்களது குடும்பத்தினருடன் இணைந்து நிற்கிறோம். பிணைக் கைதிகளாக தீவிரவாதிகளால் கொண்டு செல்லப்பட்டவர்கள் பத்திரமாக திரும்ப வேண்டும் என்று பிரார்த்திக்கிறோம். இஸ்ரேலுடன் நாம் உறுதிபட இணைந்து நிற்கிறோம்.


ஹமாஸ்  அமைப்பு முற்றிலும் செயலிழக்க வேண்டும். இஸ்ரேல் தன்னை தீவிரவாதத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ள அனைத்து  உரிமைகளும் உள்ள அதே நேரத்தில், இஸ்ரேலியர்களுக்கு மட்டுமல்லாமல், பாலஸ்தீனியர்களுக்கும் நீடித்த அமைதி ஏற்பட அனைவரும் பாடுபட வேண்டும் என்று கூறியுள்ளார் பராக் ஒபாமா.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்