பெண்ணுடன் பேசிக் கொண்டிருந்ததற்காக.. 20 வயது இளைஞனை அடித்துக் கொன்ற கும்பல்

Feb 03, 2023,03:25 PM IST
பெங்களூரு: பெங்களூருவில், 20 வயது இளைஞர் அடித்துக் கொல்லப்பட்டார்.. அவர் செய்த "தவறு".. ஒரு பெண்ணுடன் அமர்ந்து தனிமையில் பேசிக் கொண்டிருந்ததே!



இந்த கொடூரச் சம்பவம் தொடர்பாக அனில், லோஹித், பாரத், கிஷோர் என நான்கு பேரை போலீஸார் கைது செய்துள்ளதாக பெங்களூரு வடக்கு துணை போலீஸ் கமிஷனர் தேவராஜ் கூறியுள்ளார். கொல்லப்பட்ட நபரின் பெயர் கோவிந்தராஜு.

கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை கோவிந்தராஜு வீட்டுக்கு வந்த அனில், அவரை அழைத்துள்ளார். பின்னர் கோவிந்தராஜுவை தனது டூவீலரில் ஏற்றிக் கொண்டு அந்தரள்ளி என்ற இடத்திற்குக் கூட்டிப் போயுள்ளார். அங்கு மற்ற 3 பேரும் வந்துள்ளனர். அந்த இடத்தில் வைத்து நான்கு பேரும் கோவிந்தராஜுவை சரமாரியாக தாக்கியுள்ளனர். மரக் கட்டையால் சரமாரியாக அடித்ததில், கோவிந்தராஜு சம்பவ இடத்திலேயே பலியானார்.

அதன் பின்னர் நான்கு பேரும் தங்களது செல்போனை ஆப் செய்து  விட்டனர். லோஹித்தின் காரில் கோவிந்தராஜுவின் உடலை தூக்கிப் போட்ட நான்கு பேரும், சருமுடிகாட் பகுதியில் உடலைத் வீசி விட்டு தலைமறைவானார்கள்.

இந்த நிலையில் கோவிந்தராஜுவைக் காணாமல் குழப்பமடைந்த குடும்பத்தினர் போலீஸில் புகார் கொடுத்தனர்.போலீஸ் விசாரணையில் இந்த நான்கு பேரும் சிக்கினர். அவர்களிடம் விசாரணை நடத்தியபோது கோவிந்தராஜுவைக் கொன்று விட்டதை ஒப்புக் கொண்டனர். ஒரு பெண்ணுடன் பேசியதற்காக கொலையா என்று பெங்களூர் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்