பெங்களூரு: மக்களே உஷார்.. நீங்கள் வெளியே செல்லும்போது அங்கு சூழ்நிலை எப்படி உள்ளது என்பதை அறியாமல் அசட்டையாக இருந்தால் உங்களுக்கும் இந்த ஜோடி சந்தித்த பிரச்சினைதான் ஏற்படும்.
ஹோட்டலில் தங்க நேரிடுகிறதா.. அறைகள், பாத்ரூம் போன்ற இடங்களில் ரகசிய கேமராக்கள் உள்ளதா என்பதை அறிந்து செயல்படுங்கள். கலிகாலம் என்பதற்கு ஏற்ப நாட்டில் பணத்திற்காக பல
வன்மங்கள் அரங்கேறி வருகின்றன .அந்த வரிசையில் தற்போது பெங்களூரில் நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு ,கெங்கேரி மெயின் சாலையில் கெஞ்சன்புரா பகுதியில் ஹோட்டலுடன் கூடிய விடுதி ஒன்று உள்ளது. நயனா என்பவர் அந்த விடுதியின் உரிமையாளர் ஆவார். இவருடைய கணவர் கிரண். நயனாவின் உறவினரான ஒரு பெண் எம் பி ஏ படித்து வருகிறார். அந்தப் பெண் நயனாவின் ஹோட்டலுக்கு அடிக்கடி வந்து செல்வது வழக்கம்.
அந்தப் பெண் அடிக்கடி தனது காதலனை ஹோட்டலுக்கு அழைத்து வந்துள்ளார். அவர்கள் இருவரும் ஹோட்டல் அறையில் திருட்டுத்தனமாக உல்லாசமாக இருந்து வந்தனர். இது வாடிக்கையாக நடந்து வந்துள்ளது. இதனை அறிந்த கிரண் காதல் ஜோடி தங்கும் அறையில் அவர்களுக்கே தெரியாமல் ரகசிய கேமராவை பொருத்தியுள்ளார். காதல் ஜோடி அந்தரங்கமாக இருக்கும் காட்சிகளை பதிவு செய்துள்ளார்.
அதன் பின்னர் இந்த வீடியோவை மாணவிக்கு வாட்ஸ் ஆப்பில் அனுப்பியுள்ளா். தனக்கு பணம் தர வேண்டும். இல்லாவிட்டால் உறவினர்களுக்கு அனுப்பி விடுவேன் என்று மிரட்டியுள்ளார். அதிர்ச்சி அடைந்த மாணவி என்ன செய்வது என அறியாமல் குழம்பிப் போய் கடைசியில் தனது பெற்றோர்களிடம் நடந்த தவறை எடுத்துக் கூறினார்.
இதைக் கேட்டு அதிர்ந்து போன பெற்றோர், சந்திரா லேஅவுட் காவல் நிலையத்தில் கிரண் மீது புகார் கொடுத்தனர். இதன் பேரில் போலீஸார் விசாரணை நடத்தி கிரணைக் கைது செய்தனர். அவருக்கு உடந்தையாக இருந்ததாக நயனாவும் கைது செய்யப்பட்டார்.
கோடை விடுமுறை... 6 வாராந்திர சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!
பழம்பெரும் கோவில்கள்.. வீரத்தின் விளை நிலம்.. கலைகளின் தாயகம்.. நம் தாய்த் திரு தமிழ் நிலம் (2)
தமிழ்நாட்டில் இன்று ஒரு சில இடங்களில்..பலத்த காற்றுடன் மழைக்கு வாய்ப்பு..!
அனுமதி இல்லாமல் பாட்டை பயன்படுத்திய.. அஜித் பட தயாரிப்பாளருக்கு இளையராஜா நோட்டீஸ்
நெல்லையில்.. சக மாணவரை வெட்டிய எட்டாம் வகுப்பு மாணவர்: தமிழகம் எங்கே போகிறது? டாக்டர். அன்புமணி
அதிமுக பொதுக்குழு கூட்டம் மே 2ல் நடைபெறும்:எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு!
மாநில உரிமைகளைப் பாதுகாப்பது குறித்து ஆராய ஜோசப் குரியன் தலைமையில் குழு.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
ஆங்கில வழி பாடநூல்களின் தலைப்புகள் எல்லாம் இந்தி: மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கண்டனம்!
இந்தியில் வெளியாகியுள்ள 'ஜாட்' திரைப்படத்தைத் தடை செய்ய வேண்டும் - நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான்!