விரட்டும் "கோச்சடையான்" வழக்கு.. லதா ரஜினிகாந்த்துக்கு பிடிவாரண்ட்.. ஜாமீன் அளித்தது கோர்ட்!

Dec 26, 2023,03:53 PM IST

பெங்களூரு: கோச்சடையான் பட விவகாரம் தொடர்பான மோசடி வழக்கில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் மனைவி லதா ரஜினிகாந்த்துக்கு  பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில் தற்போது பெங்களூர் மாநகர முதலாவது தலைமை மெட்ரோபாலிடன் நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.


நடிகர் ரஜினிகாந்த்தை வைத்து அவரது மகள் செளந்தர்யா ரஜினிகாந்.த் கடந்த 2014ம் ஆண்டு கோச்சடையான் என்ற படத்தை எடுத்தார். இந்தப் படம் அனிமேஷனில் உருவாக்கப்பட்டது.  இந்தப் படத்தின் தயாரிப்பாளர்களில் மீடியா ஒன் என்டர்டைன்மென்ட் நிறுவனமும் ஒன்றாகும்.  படத் தயாரிப்புச் செலவுகளுக்காக ஆட் பீரோ நிறுவனத்திடம் மீடியா ஒன் நிறுவனம் ரூ. 6.2 கோடி கடன் வாங்கியிருந்தது.


இந்தக் கடன் தொகைக்கான உத்தரவாதத்தில் லதா ரஜினிகாந்த்தும் கையெழுத்திட்டிருந்தார். ஆனால் வாங்கிய கடனை மீடியா ஒன் நிறுவனம் திருப்பித் தரவில்லை. இதையடுத்து மீடியா ஒன் நிறுவனத்தின் முரளி மற்றும் உத்தரவாதக் கையெழுத்துப் போட்டிருந்த லதா ரஜினிகாந்த் ஆகிய இருவர் மீதும் பெங்களூரு ஹலசூர் கேட் போலீஸ் நிலையத்தில் ஆட் பீரோ நிறுவனம் புகார் அளித்தது. அதன் பேரில் போலீஸார் லதா ரஜினிகாந்த், முரளி மீது வழக்குத் தொடர்ந்தனர். 




இந்த வழக்கை தள்ளுபடி செய்யக் கோரி லதா ரஜினிகாந்த் தாக்கல் செய்த மனு சமீபத்தில் உச்சநீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது. அவர் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில் லதா ரஜினிகாந்த் விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வந்ததால் அவருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.


இதையடுத்து இன்று லதா ரஜினிகாந்த் கோர்ட்டில் நேரில் ஆஜரானார். அப்போது ஜாமீன் வழங்கக் கோரி அவர் சார்பில் மனு செய்யப்பட்டது. அதைப் பரிசீலித்த நீதிபதி ஆனந்த்  கரிம்மன்னவர், இரு நபர் உத்தரவாதத்தின் பேரில் ஜாமீன் அளித்து உத்தரவிட்டார்.  பின்னர் வழக்கு அடுத்த ஆண்டு ஜனவரி 4ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்