கன மழை எச்சரிக்கை.. குற்றாலம் ஐந்தருவியில் குளிக்க நெல்லை மாவட்ட நிர்வாகம் தடை!

Jun 08, 2024,03:32 PM IST

குற்றாலம்: குற்றாலம் ஐந்தருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. மற்ற பகுதிகளில் உள்ள அருவிகளில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.


தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கோடை மழை ஆங்காங்கே பெய்து மக்களை மகிழ்வித்து வருகிறது. இதனால்,  கோடை காலத்திலும் குற்றால அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்தால், சுற்றுலா பயணிகள் அதிகளவில் குற்றாலத்தில் குவிந்தனர். மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த  சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக  குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து தற்பொழுது அதிகரித்துள்ளது.


கோடை விடுமுறை முடிய உள்ள நிலையில் அனைத்து இடங்களிலும் சுற்றுலா பயணிகள் குவியத் தொடங்கியுள்ளார். அதிலும் குறிப்பாக குற்றால அருவிகளில் மக்கள் கூட்டம் சற்று அதிகரித்தே உள்ளது. கடந்த சில நாட்களாக அருவிகளில் நீர் வரத்து வந்ததால் இங்கு சுற்றுலா பயணிகள் காலை முதலே அதிகளவில் குவிந்து வருகின்றனர்.




இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் குற்றாலத்தில் திடீர் என வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.  இதனால் குளித்துக் கொண்டிருந்த மக்கள் அலறி அடித்துக்கொண்டு ஓடினர். இந்த காட்டாற்று வெள்ளத்தில், அஸ்வின் என்ற 17 வயது சிறுவன் பலியானார்.  இதன் காரணமாக குற்றால அருவிகளில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் செய்யப்பட்டுள்ளன. இதன்படி தொடர்ந்து இப்பகுதிகளில் மழை பெய்து வருவதினால், ஐந்தறிவி பகுதியில் அபாய ஒலி எழுப்பப்பட்டு குளித்து கொண்டிருந்த சுற்றுலா பயணிகள் அப்புறப்படுத்தப்பட்டனர். 


தொடர் கனமழையை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குற்றால ஐந்து அருவிகளில் குளிக்க மக்களுக்கு தடை விதிக்கப்பட்டது. மெயின் அருவி மற்றும் பழைய குற்றாலம் உள்ளிட்ட  அருவிகளில்  சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்