குழந்தைதானே.. அவருக்கும் ஓய்வு வேணும்ல.. அயோத்தி ராமருக்கு தினமும் ஒரு மணி நேரம் ரெஸ்ட்!

Feb 17, 2024,05:20 PM IST

அயோத்தி: அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ள ராமர் கோவிலில் தினமும் ஒரு மணி நேரம் நடை சாத்தப்படும் என்று அக்கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


உத்திரபிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்ட பிரம்மாண்ட பால ராமர் கோவில் கும்பாபிஷேகம் கடந்த 22ம் தேதி  கோலாகலமாக நடந்தது. இக்கோவிலை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்து முதல் பூஜையை செய்தார். பிரமாண்ட கோவிலில் பிரதிஷ்டை எனப்படும் புனித நிகழ்வு வெகு விமர்சையாக  நடந்து முடிந்தது. கர்ப்பகிரகத்தில் உள்ள ராம விக்ரஹம் பிரதிஷ்டை செய்யப்பட்டு முடி இருந்த ராமர் கண்கள் திறக்கப்பட்டு, உயிர் பெறும் முக்கிய நிகழ்வு இனிதே நடந்தது.




500 ஆண்டுகளுக்கு முன்னர் சிறப்புடன் இருந்த அயோத்தி தற்பொழுது புத்துயிர் பெற்றுள்ளது. தசரதச் சக்கரவர்த்தியின் மகன் ராமர். ராமர் பிறந்த இடத்தில்தான் இந்தக் கோவில் இப்போது கட்டப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே ராமர் சிலை, பால ராமர் சிலையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 


இக்கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து தரிசனம் செய்து வருகின்றனர். உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் அதிக அளவில் பக்தர்கள் வருகிறார்கள். இந்த நிலையில் அயோத்தி ராமர் கோவில் நடை தினமும் நண்பகல் 12:30 மணி முதல் 1.30 மணி வரை ஒரு மணி நேரம் அடைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இது குறித்து ராமர் கோயில் தலைமை அர்ச்சகர் சத்யேந்திர தாஸ் கூறுகையில், ராம் லல்லா ஒரு ஐந்து வயது குழந்தை. காலை 4 மணிக்கு தூக்கத்திலிருந்து எழும். அவரால் நீண்ட நேரம் விழித்துக் கொண்டு இருக்க முடியாது. அதனால் ராமர் கோவில் கதவை மதியம் 12:30 முதல் 1.30 வரை மூடும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்