சென்னை: டெல்லி முதல்வராகப் பதவியேற்றுள்ள ரேகா குப்தாவுக்கு சொந்தமாக எந்த வாகனமும் இல்லை. அதேபோல அவரது பெயரில் ரூ. 48 லட்சம் அளவுக்கு கடன் உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
பாஜகவைச் சேர்ந்த முதல் முறை எம்எல்ஏவான ரேகா குப்தா இன்று டெல்லியின் புதிய முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். அவருடன், ஆறு அமைச்சர்களும் பதவியேற்றனர். ஷாலிமார் பாக் தொகுதியிலிருந்து முதல் முறையாக எம்.எல்.ஏ. ஆன ரேகா குப்தா, ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற பிரமாண்டமான விழாவில் முதல்வராகப் பதவியேற்றார்.
பாஜக 26 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லியில் ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில் ரேகா குப்தா மீதான எதிர்பார்ப்பு அபரிமிதமாக உள்ளது. இந்த நிலையில் முதல்வராகியுள்ள ரேகா குப்தாவைப் பற்றி அறிய நாடே ஆர்வம் காட்டுகிறது. காரணம் பாஜக எது செய்தாலும் ஏதாவது ஒரு மெகா பிளானை உள்ளடக்கியே செய்யும் என்பதால் ரேகா குப்தாவை வைத்து என்ன மாஜிக் காட்டப் போகிறது என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
இந்த நிலையில் முதல்வர் ரேகா குப்தாவின் சொத்து மதிப்பு குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது. 2025 டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு தேர்தல் ஆணையத்திற்கு தாக்கல் செய்யப்பட்ட அவரது அறிக்கையின் படி அவரது சொத்து மதிப்பு விவரம் இதுதான்:
- 2023-24 நிதியாண்டில் அவரது முழு வருமானம் ரூ. 6,92,050
- மொத்த சொத்து மதிப்பு ₹3.55 கோடி (அசையும் சொத்துகள் ரூ. 1.25 கோடி, அசையா சொத்துகள் ரூ. 2.3 கோடி)
- ரேகா குப்தாவுக்கு ரூ. 48.44 லட்சம் கடன் உள்ளது
- ரேகா குப்தாவின் கணவர் மனிஷ் குப்தாவின் வருமானம் ரூ. 97.33 லட்சம்
- ரேகா குப்தாவிட் சொந்தமாக எந்த வாகனமும் இல்லை, ஆனால் ரூ. 18 லட்சம் மதிப்புள்ள நகைகள் உள்ளன
ரேகா குப்தா டெல்லியின் நான்காவது பெண் முதல்வராக, பாஜகவின் சுஷ்மா ஸ்வராஜ், காங்கிரசின் ஷீலா தீக்ஷித், மற்றும் ஆம்ஆத்மி கட்சியின் அதிஷி ஆகியோருக்குப் பிறகு பதவி ஏற்றுள்ளார்.
- 1996-97: டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்க (DUSU) தலைவராக இருந்தவர் ரேகா குப்தா.
- 2007: டெல்லி மாநகராட்சியில் கவுன்சிலராக செயல்பட்டார்.
- 2007-09: மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு குழுவின் தலைவராக அவர் செயல்பட்டுள்ளார்.
- பாஜகவின் இளைஞர் அணியான BJYM-ல் செயலராகவும் தேசிய செயலராகவும் பதவி வகித்துள்ளார் ரேகா குப்தா.
- சட்டசபைத் தேர்தலில் ரேகா குப்தா போட்டியிட்டது இது 3வது முறையாகும். இதற்கு முன்பு 2015 மற்றும் 2020 தேர்தல்களில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிட்டு வென்ற வந்தனா குமாரியிடம் மோதி தோல்வியுற்றிருந்தார். 3வது முயற்சியில் அவர் வெற்றி பெற்று தற்போது முதல்வரும் ஆகியுள்ளார்.
- தனது 3வது தேர்தலிலும் வந்தனா குமாரியுடன்தான் மோதினார் ரேகா குப்தா. இதில் 29,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றியடைந்தார்.
இளம் வயதிலேயே அரசியலில் நுழைந்ததால், பாஜகவில் ரேகா குப்தா ஒரு நம்பிக்கையான பெண் தலைவராக திகழ்கிறார். டெல்லியில் ஆம் ஆத்மியின் ஆதிக்கம் இன்னும் வலுவாகவே இருக்கும் நிலையில், ரேகா குப்தாவின் ஆட்சி பாஜகவுக்கு ஸ்திரமான அடித்தளத்தை உருவாக்குமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ஆணாதிக்க அரசியலில் பெண் தலைவர்கள் சாதிப்பது என்பது மிகவும் அரிதானதாகவே உள்ளது. அந்த வகையில் ரேகா குப்தாவின் செயல்பாடுகள் பெரும் எதிர்பார்ப்புக்குள்ளாகியுள்ளது. ஒரு முதல்வராக அவர் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் தேசிய அரசியலிலும் அவருக்கு முக்கியத்துவம் கிடைக்கும் வாய்ப்பும் பிரகாசமாக உள்ளது என்பதில் சந்தேகம் இல்லை.
புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாடும் அமல்படுத்த வேண்டும்.. மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்
உலக தாய் மொழி தினம்.. தமிழுக்கு எதிராக நிகழ்ந்து விட்ட தீமைகள் அனைத்தும் எங்கிருந்து தொடங்கின?
PMSHRI திட்டத்தில் இணைந்தால் தமிழக மாணவர்களின் எதிர்காலம் சிறக்கும்: பாஜக தலைவர் அண்ணாமலை
ஏழை பிள்ளைகளை கூலி தொழிலுக்கு அனுப்பும் திட்டமே புதிய கல்விக் கொள்கை திட்டம்.. சபாநாயகர் அப்பாவு
ஒரு நாட்டைக் கைப்பற்ற.. அதன் மொழியை அழிப்பதே சிறந்த வழி.. குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தங்கர்
Welcome To Tamil Nadu: நேற்று அந்த ஹேஷ்டேக்.. இன்று இந்த ஹேஷ்டேக்.. நடுவுல புகுந்த தவெக.. அடடே!
கூல் தோனி.. கிரிக்கெட் எதிர்காலம் குறித்து போட்ட சூப்பர் போஸ்ட்.. உற்சாக வெள்ளத்தில் ரசிகர்கள்!
உலக தாய்மொழி தினம் 2025.. தாயின் சிறந்த கோயிலும் இல்லை.. தாய்மொழிக்கிணை தரணியில் இல்லை!
மனைவியைப் பிரிந்தார் யுஸ்வேந்திர சாஹல்.. 4 வருடத்தில் கசந்து போன வாழ்க்கை.. ரசிகர்கள் ஷாக்!
{{comments.comment}}