ஆம்ஸ்ட்ராங் கொலை.. தலைமறைவாக இருந்த புளியந்தோப்பு அஞ்சலை.. ஓட்டேரியில் கைது!

Jul 19, 2024,09:51 PM IST

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த வட சென்னை மேற்கு மாவட்ட பாஜக மகளிர் அணி  முன்னாள் துணைத் தலைவர் அஞ்சலையை போலீஸார் கைது செய்துள்ளனர்.


ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் போலீஸார் தீவிரமாக விசாரணையில் இறங்கியுள்ளனர். சரமாரியாக பலரும் கைது செய்யப்பட்டு வருகின்றனர். முதலில் 11 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணைக்குப் பிறகு மேலும் 3 பேர் சிக்கினார்கள். இதற்கு இடையில் திருவேங்கடம் என்ற கைதி போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.




இந்தக் கொலை வழக்கில் மேலும் பல ரவுடிகள், அரசியல் கட்சிகளின் தொடர்புடையவர்கள் சம்பந்தப்பட்டிருப்பதாக தகவல்கள் வந்தன. அவர்களில் முக்கியமாக புளியந்தோப்பு அஞ்சலை பெயர் அடிபட்டது. இவர் முன்னாள் ரவுடி ஆற்காடு சுரேஷின் காதலி ஆவார். சென்னை மேற்கு மாவட்ட பாஜக மகளிர் அணி  முன்னாள் துணைத் தலைவராக இருந்து வந்தார். இவரது பெயர் கொலை வழக்கில் அடிபட்டதும் கட்சியை விட்டு இவர் நீக்கப்பட்டார். இதேபோல சம்போ செந்தில் எனப்படும் சம்பவம் செந்தில் என்பவர்  பெயரும் அடிபடுகிறது. இவர் தூத்துக்குடியைச் சேர்ந்தவர். வக்கீலாக இருந்து ரவுடியாக மாறியவர் இவர். இவர்தான் இந்தக் கொலைக்கு ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்ததாக போலீஸ் தரப்பு நம்புகிறது.


இவர்கள் தவிர மேலும் பலரையும் போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த நிலையில் புளியந்தோப்பு அஞ்சலையை, ஓட்டேரியில் வைத்து தற்போது போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த அஞ்சலைக்கு கொலை வழக்கில் முக்கியப் பங்கு இருப்பதாக போலீஸ் தரப்பு நம்புகிறது. மேலும் இந்தக் கொலைக்காக தனது சார்பில் ரூ. 10 லட்சம் பணத்தை அஞ்சலை கொடுத்ததாகவும் போலீஸ் தரப்பு கூறுகிறது. அஞ்சலையை விசாரிக்கும்போது மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்