பார்ரா.. திடீரென ஆவேசமான அர்ஜூன் டெண்டுல்கர்.. சிரிச்சுக்கிட்டே சவுண்டு விட்ட மார்கஸ் ஸ்டாய்னிஸ்!

May 18, 2024,09:56 AM IST

மும்பை: லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியின்போது மும்பை இந்தியன்ஸ் வீரர் அர்ஜூன் டெண்டுல்கர் திடீரென ஆவேசம் காட்டியதால் சற்றே சர்ப்பிரைஸ் ஆன லக்னோ வீரர் மார்கஸ் ஸ்டாய்னிஸ், சிரித்தபடி, அர்ஜூனை நோக்கி சத்தம் போட்டு ஏதோ கூறியதால் சலசலப்பு ஏற்பட்டது.


நடப்பு ஐபிஎல் தொடரின் பிளே ஆப் பிரிவுக்குத் தகுதி பெறும் வாய்ப்பை ஏற்கனவே மும்பை இந்தியன்ஸ் இழந்து விட்டது. இந்த சூழ்நிலையில் மும்பைக்கும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கும் நேற்று வாங்கடே மைதானத்தில் லீக் போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியின்போது அர்ஜூன் டெண்டுல்கர் திடீரென ஆக்ரோஷம் காட்டி பரபரப்பை ஏற்படுத்தினார்.




லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி பேட்டிங் செய்து கொண்டிருந்தது. 2வது ஓவரின்போது பந்து வீசிய அர்ஜூன் டெண்டுல்கர், அவரை எல்பிடபிள்யூ ஆக்க முயன்றார். ஆனால் 3வது அம்பயர் அவுட் கொடுக்கவில்லை. இந்த ஓவரின் முதல் பந்தை ஸ்டாய்னிஸ் அடித்தபோது பந்து நேராக அர்ஜூனை நோக்கி வந்தது. அதைப் பார்த்த அர்ஜூன் படு ஆவேசமாக பந்தை எடுத்து வேகமாக ஸ்டாய்னிஸை நோக்கி வீசுவது போல ஆக்ஷன் காட்டினார். இதனால் மைதானத்தில் பெரும் ஆரவாரம் ஏற்பட்டது.


அர்ஜூனின் இந்த ஆவேசத்தைப் பார்த்து சர்ப்பிரைஸ் ஆன ஸ்டாய்னிஸ் சிரித்தபடி, அர்ஜூனை நோக்கி ஏதோ சத்தமாக பேசினார்.  பிறகு நிலைமை சகஜமானது. அர்ஜூன் டெண்டுல்கர் பேட்ஸ்மேனாக மட்டுமலல்லாமல் வேகப் பந்து வீச்சாளராகவும் வலம் வருகிறார்.


நேற்றைய போட்டியில் கே.எல். ராகுல் தலைமையிலான லக்னோ அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. முதலில் விளையாடிய லக்னோ அணி 6 விக்கெட் இழப்புக்கு 214 ரன்களை எடுத்தது. சேசிங்கில் மும்பை அணியால் 196 ரன்களை மட்டுமே திரட்ட முடிந்தது.


புள்ளிகள் பட்டியலில் 14 புள்ளிகளுடன் 6வது இடத்தில் இருக்கிறது லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ். அதேசமயம், வெறும் 8 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் இருக்கிறது மும்பை இந்தியன்ஸ் அணி. 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி நடப்பு தொடரில் பெரும் ஏமாற்றத்தையே ரசிகர்களுக்குக் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்