கலிபோர்னியா: ஆப்பிள் நிறுவனம் தனது ஊழியர்கள் 600 பேரை வேலையை விட்டு நீக்கியுள்ளது. முன்னதாக தனது கார் மற்றும் ஸ்மார்ட்வாரட்ச் டிஸ்பிளே தயாரிப்புத் திட்டத்தைக் கைவிட்ட நிலையில் தற்போது லேஆப் நடவடிக்கையில் ஆப்பிள் இறங்கியுள்ளது.
நீக்கப்பட்ட ஊழியர்களில் 85 பேர் ஐபோன் ஸ்கிரீன் திட்டத்தின் கீழ் வேலை பார்த்து வந்தவர்கள். மற்றவர்கள் கார் திட்டத்தின் கீழ் வேலை பார்த்து வந்தவர்கள். கார் தயாரிப்புத் திட்டத்தை ஆப்பிள் நிறுவனம் கைவிட்டதைத் தொடர்ந்து இவர்களுக்கும் வேலை போய் விட்டது.
கடந்த பிப்ரவரி மாதம்தான் கார் திட்டம் மற்றும் ஸ்மார்ட்வாட்ச் டிஸ்பிளே திட்டங்களை அறிவித்தது ஆப்பிள் நிறுவனம். தற்போது இதை நிறுத்தி விட்டது. ஊழியர்களையும் வேலையை விட்டு அனுப்பியுள்ளது. கார் திட்டத்துக்கான செலவீனங்கள் கவலை அளிக்கும் வகையில் இருந்ததாலும், சரியான திட்டமிடல் இல்லாததாலும் அதைக் கைவிட்டு விட்டது ஆப்பிள் நிறுவனம்.
ஆப்பிள் நிறுவனத்தால் வேலையை விட்டு நீக்கப்பட்டவர்களில் 371 பேர் சான்டாகிளாராவில் உள்ள அலுவலகத்தில் பணியாற்றி வந்தவர்கள் ஆவர்.
கடந்த ஆண்டு பல ஆயிரம் பேரை முன்னணி நிறுவனங்கள் சரமாரியாக வேலையை விட்டு நீக்கின. இந்த ஆண்டும் இது தொடர்கதையாக நீடித்து வருகிறது. லே ஆப்பை நடத்தி வரும் நிறுவனங்களின் வரிசையில் தற்போது ஆப்பிள் நிறுவனமும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மதுரையை வச்சு செய்யும் வெயில்.. மேலும் சில நாட்கள் வெளுக்குமாம்.. அதிகரிக்கவும் வாய்ப்பு.. கேர்ஃபுல்
காட்டுத் தீயாய் பரவிய துணை முதல்வர் வதந்தி.. சிரித்துக் கொண்டே பதிலளித்த உதயநிதி ஸ்டாலின்!
ஜிம்பாப்வேயை உலுக்கும் பஞ்சம்.. அதை விரட்ட அரசு எடுத்த முடிவு.. .. அதிர்ச்சியில் நாடுகள்!
ஒரே நாடு ஒரே தேர்தல்.. ராம்நாத் கோவிந்த் குழு பரிந்துரைகளை ஏற்றது மத்திய அமைச்சரவை!
அழகாய் பூத்தது.. நீலகிரியில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும் நீலக்குறிஞ்சி சீசன் தொடங்கியது!
Thalaivettiyan Palayam: ஜிபி முத்து கொடுத்த சூப்பர் ஐடியாஸ்.. கூலாக கேட்டுக் கொண்ட அபிஷேக் குமார்!
"பாட்டி கதியே உங்களுக்கும்".. ராகுல்காந்திக்கு பாஜக தலைவர் மிரட்டல்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
தீபாவளி ரஷ்ஷை சமாளிக்க.. தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுக்கும் தமிழக அரசு!
மீன்வளப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா.. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் புறக்கணித்தார்!
{{comments.comment}}