இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் இடைக்கால பிரதமராக அன்வர் உல் ஹக் கக்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் பலுசிஸ்தானைச் சேர்ந்த எம்.பி. ஆவார்.
இதுகுறித்த தகவலை பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு விட்டது. நாடாளுமன்றத்துக்குத் தேர்தல் நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து பதவி விலகும் பிரதமர் சபாஸ் ஷெரீப்பும், எதிர்க்கட்சித் தலைவர் ராஜா ரியாஸ் அகமதுவும் இணைந்து ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையின் இறுதியில் கக்கர் இடைக்கால பிரதமராக தேர்வு செய்யப்பட்டார்.
நாடாளுமன்றத் தேர்தல் முடியும் வரை பிரதமராக இருப்பார் கக்கர் என்பது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் நாடாளுமன்றத்துக்கு 90 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஆனால் தற்போது வாக்காளர் பட்டியல் தயாரிப்புப் பணி தாமதமாகும் என்பதால் தேர்தல் நடத்துவதும் தாமதமாகும் என்று கூறப்படுகிறது.
வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் போட்டியிட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. அவர் ஊழல் வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இடைக்கால பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ள கக்கர் பலுசிஸ்தான் அவாமி கட்சியைச் சேர்ந்தவர் ஆவார். கடந்த 6 வருடமாக பாகிஸ்தான் மேல்சபை உறுப்பினராக கக்கர் இருந்து வருகிறார்.
ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!
ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?
பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!
சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!
வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி
என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!
அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!
நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!
{{comments.comment}}