சென்னை: தமிழ்நாடு முழுவதும் வெயில் தாக்கம் கடுமையாக இருப்பதால் 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவ மாணவியருக்கு இறுதித் தேர்வை முன் கூட்டியே முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் வெயில் கடுமையாக உள்ளது. கடுமையான வெயில் அடித்து வருவதால் வெளியில் தலை காட்ட முடியவில்லை. அதிலும் தற்போது பரீட்சை காலம் என்பதால் பிற்பகலில் தேர்வு எழுதச் செல்வோர் கடும் அவஸ்தைக்குள்ளாகியுள்ளனர். இதனால் பெற்றோர்களும் தங்களது பிள்ளைகள் படும் கஷ்டத்தைக் கண்டு அவதிக்குள்ளாகியுள்ளனர்.
தற்போது பிளஸ்டூ பரீட்சை முடிந்து விட்டது. பத்தாம் வகுப்பு தேர்வுகள் தொடங்கி நடந்து வருகின்றன. இதுதவிர 1 முதல் 5ம் வகுப்புகளுக்குரிய இறுதித் தேர்வுகள் ஏப்ரல் 9ம் தேதி தொடங்கி ஏப்ரல் 21ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல 6 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏப்ரல் 8ம் தேதி தொடங்கி 24ம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் தற்போது வெயில் கடுமையாக அடித்து வருவதால் 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவ மாணவியருக்கான இறுதித் தேர்வை முன்கூட்டியே முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி இவர்களுக்கு 21ம் தேதிக்குப் பதில், 17ம் தேதியடன் இறுதித் தேர்வுகள் முடிவடையவுள்ளன. இவர்களுக்கான தேர்வும் கூட ஏப்ரல் 9ம் தேதிக்குப் பதில் 7ம் தேதியே தொடங்கவுள்ளது. இந்த மாணவர்களுக்கு முன்கூட்டியே கோடை விடுமுறையும் விடப்படவுள்ளது.
புதிய தேர்வு அட்டவணையையும் தொடக்கக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது. அந்த புதிய அட்டவணை விவரம்:
1 முதல் 3ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை 10 மணி முதல் 12 மணி வரை தேர்வு நடைபெறும். இவர்களுக்கு 7ம் தேதி தமிழ், 8ம் தேதி விருப்ப மொழி, 9ம் தேதி ஆங்கிலம், 11ம் தேதி கணக்கு தேர்வுகள் நடைபெறும்.
4ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு 7ம் தேதி தமிழ், 8ம் தேதி விருப்ப மொழி, 9ம் தேதி ஆங்கிலம், 11ம் தேதி கணக்கு, 15ம் தேதி அறிவியல், 17ம் தேதி சமூக அறிவியல் தேர்வுகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கும்பகோணம் வெற்றிலைக்கும் தோவாளை மாணிக்க மாலைக்கும் புவிசார் குறியீடு!
டி.என்.பி.எஸ்.சி குரூப்-1 தேர்வு.. ஏப்ரல் 30 வரை விண்ணப்பிக்கலாம்.. வெளியானது அரசு உத்தரவு..!
தமிழ்நாட்டில் வெப்பநிலை படிப்படியாக ..2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்..!
வழக்கத்தைவிட.. ஏப்ரல், ஜூனில் வெப்பம் அதிகரிக்கும்.. இந்திய வானிலை மையம் எச்சரிக்கை..!
தமிழகத்தில் ஆட்சி அமைப்போம்.. அமித்ஷா கூறியது நகைச்சுவை:விசிக தலைவர் திருமாவளவன்!
பாஜகவிலிருந்து அண்ணாமலை நீக்கப்படுகிறாரா.. பரவும் தகவலால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!
நோட் பண்ணிக்கோங்க மக்களே... தமிழகத்தில் ஏப்ரல் மாதத்தில் 10 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை!
கார்த்திகை விரதமும், சதுர்த்தி விரதமும் இணைந்து வரும் ஏப்ரல் 1
நான் ஏன் இப்படி??? (சிறுகதை)
{{comments.comment}}