பாத்ரூம் போறப்போ.. வெளியே வர்றப்பெல்லாம் இனி பிரஸ் மீட் கிடையாது.. அண்ணாமலை

Jun 11, 2024,05:17 PM IST

கோயம்பத்தூர்: இனிமேல் விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்திக்க மாட்டேன். கட்சி அலுவலகத்தில் மட்டுமே பிரஸ் மீட் என்று தமிழ்நாடு பாஜக  தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.


கோவைக்கு இன்று வந்த அண்ணாமலையிடம் விமான நிலையத்தில் செய்தியாளர்கள் கருத்து கேட்க முயன்றனர். ஆனால் அவர் காருக்குள் அமர்ந்திருந்த நிலையில், இனி லைப்ல விமான நிலையத்தில் பிரஸ் மீட் பண்ண மாட்டேண்ணா. எல்லாத்தையும் ஆர்டர் பண்ணப் போறோம். பாத்ரூம் போகும்போது, வெளியே வரும்போது இனி யாரும் பேச மாட்டாங்க. இனி எல்லாமே கட்சி ஆபீசில்தான் நடக்கும்.


கட்சித் தலைவர்கள் ஷெட்யூல் போட்டுக் கொடுத்திருவாங்க. எல்லாத்தையும் தலைவர்கள் சொல்வாங்க. ஏன்னா, விமானத்திலிருந்து இறங்குவோம். இங்கு ஏதாவது 2 விஷயம் நடந்திருக்கும். நமக்கு இங்க வரும்போது அது தெரியிறதில்லை. இதனால் முறைப்படி செய்யப் போறோம். எல்லாமே 24 மணி நேரத்துக்கு முன்னாடியே வந்துரும் என்று கூறி விட்டுக் கிளம்பிச் சென்றார் அண்ணாமலை.




விமானநிலையத்திற்கு வரும் தலைவர்களிடம் பேட்டி எடுப்பது செய்தியாளர்கள் வழக்கமாக மேற்கொள்வதுதான். இதற்காகவே ஒரு இடத்தில் கூடி இருப்பார்கள். அங்கு வந்து தலைவர்கள் பேட்டி கொடுத்து விட்டுச் செல்வார்கள். காலம் காலமாக நடப்பதுதான் இது. ஆனால் அண்ணாமலை இன்றைய பேட்டியைத் தவிர்த்தது ஏன் என்று தெரியவில்லை. அதேசமயம், இனிமேல் தலைவர்கள் கட்சி அலுவலகத்தில் மட்டுமே பேட்டி நடக்கும் என்று அவர் கூறியுள்ளது, கோவைக்கு மட்டுமா அல்லது தமிழ்நாடு முழுமைக்குமா என்று தெரியவில்லை.


அமைச்சரவையில் அண்ணாமலைக்கு இடம் தராதது, தமிழிசை உள்ளிட்ட தலைவர்கள் சில கருத்துக்களைக் கூறியுள்ளது உள்பட தர்மசங்கடமான கேள்விகளுக்குப் பதில் அளிப்பதைத் தவிர்க்கவே அண்ணாமலை விமான நிலைய பிரஸ்மீட்டைத் தவிர்த்தாரா என்ற கேள்வியும் எழுகிறது. அதேசமயம், கட்சி அலுவலகத்தில் பிரஸ் மீட் நாளை உண்டு என்று அவர் சொல்லியிருப்பதால் நாளை அண்ணாமலையிடம் கேட்கப் போகும் கேள்விகளுக்கு அவர் அளிக்கப் போகும் பதில்கள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

சமீபத்திய செய்திகள்

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

news

தமிழாசிரியர் பணி.. இந்தி, சமஸ்கிருதம் எப்படி விரும்பத்தக்க தகுதியாக முடியும்?... சு.வெங்கடேசன்

news

என்னா சேட்டை பாருங்க.. சத்துணவு முட்டையை வைத்து ஆம்லேட் போட்ட திருச்சி ஹோட்டல்!

அதிகம் பார்க்கும் செய்திகள்