அஞ்சலையம்மாள் நினைவு நாள்: தவெக தலைவர் விஜய் மரியாதை!

Feb 20, 2025,04:14 PM IST

சென்னை: அஞ்சலையம்மாள் நினைவு நாளையொட்டி பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள அஞ்சலையம்மாள் சிலைக்கு தவெக தலைவர் விஜய் மரியாதை செலுத்தியுள்ளார்.


தவெகவின் கொள்கை தலைவர்களில் ஒருவரான அஞ்சலை அம்மாள் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளார் தவெக தலைவர் விஜய்.  விஜய்யின் தவெக கட்சிக்கு தமிழக மக்கள் மற்றும் ரசிகர்களிடையே மிகப்பெரிய ஆதரவு கிடைத்துள்ளது. அது மட்டும் இன்றி மக்கள் மத்தியில் கட்சி குறித்த எதிர்பார்ப்பும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தவெக கட்சியின் உட்கட்டமைப்பு பணிகளை விறுவிறுப்பாக செய்து முடித்த விஜய் தற்போது மாவட்ட நிர்வாகிகளின் நியமனம் குறித்த பட்டியலையும் வெளியிட்டுள்ளார். இது ஒருபக்கம் நடக்க, மற்றொருபக்கம் தமிழ் சினிமாவில் விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் படத்திலும் நடித்து வருகிறார். 




தமிழக வெற்றிக் கழக தொடங்கப்பட்டு, கடந்த பிப்ரவரி 2ம் தேதியுடன்  ஓராண்டு நிறைவடைந்த நிலையில், ஓராண்டு நிறைவையொட்டி கட்சி அலுவலகத்தில் விஜய் கட்சி கொடியை ஏற்றி வைத்து கொள்கை தலைவர்களான அம்பேத்கர், பெரியார், காமராஜர், வேலுநாச்சியார், அஞ்சலையம்மாள் ஆகியோர்களின்  சிலையையும் திறந்து வைத்தார். அதேபோல் கட்சி ஓராண்டு விழாவை கொண்டாடும் விதமாக இந்த மாதம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் நலத்திட்ட உதவிகளையும் செய்து வருகிறார். 


இந்நிலையில், சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் உள்ள அஞ்சலையம்மாள் சிலைக்கு தவெக தலைவர் விஜய் மரியாதை செலுத்தியுள்ளார்.படப்பிடிப்புத் தளத்திலிருந்து மதிய உணவு இடைவெளியின் போது தவெக அலுவலகம் வந்த விஜய், அஞ்சலையம்மாள் சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி  மரியாதை செலுத்தினார். பிறகு மீண்டும் படப்பிடிப்பு தளத்திற்கு புறப்பட்டார். அஞ்சலையம்மாள் நினைவு நாளை முன்னிட்டு இன்று தவெக சார்பில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமான ஏழை மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு உணவுகளை வாங்கி சாப்பிட்டனர்.


இந்நிலையில், தவெக தலைவர் விஜய் வெளியிட்ட அறிக்கையில், நாட்டு விடுதலைக்காகவும், மக்களின் வாழ்வாதாரத்திற்காகவும் போராடிய எங்கள் கொள்கைத் தலைவர், விடுதலைப் போராளி, மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள் அவர்களின் நினைவு தினத்தையொட்டி, பனையூரில் உள்ள கழகத் தலைமை நிலையச் செயலகத்தில், அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன்.


மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள் அவர்களின் நினைவு தினத்தில், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் நலன் மற்றும் உரிமைகளோடு, அவர்களின் பாதுகாப்பையும் மீட்டெடுக்க உறுதி ஏற்போம் என்று தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தயவு செய்து அவதூறு பரப்புவதை நிறுத்துங்க.. நடிகர் ஸ்ரீயின் குடும்பத்தினர் வேண்டுகோள்..!

news

சபரிமலையில் நடிகர்கள் கார்த்தி ரவி மோகன் சுவாமி தரிசனம்!

news

Today gold rate: வரலாறு காணாத தொடர் உயர்வில் தங்கம் விலை... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

வக்பு சட்டத்தை கண்டித்து.. கடை அடைப்பு போராட்டம் நெல்லையில் பரபரப்பு..!

news

கோடை விடுமுறையை மாணவர்கள் பயனுள்ள வகையில் கழிக்க வேண்டும்.. அமைச்சர் அன்பில் மகேஷ்..!

news

அது மட்டும் பண்ணாதீங்க...அமைச்சர்களுக்கு முதல்வர் கொடுத்த அட்வைஸ்

news

குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட முடியுமா..? குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் கேள்வி..!

news

good friday 2025 : புனித வெள்ளிக்கு ஏன் இந்த பெயர் வந்தது தெரியுமா?

news

என்னென்ன காயெல்லாமோ சாப்பிட்டிருப்பீங்க.. தோசைக்காய பப்பு டேஸ்ட் பண்ணிருக்கீங்களா..!

அதிகம் பார்க்கும் செய்திகள்