ஆந்திராவில்.. 2 ரயில்கள் மோதி பெரும் விபத்து.. மத்திய, மாநில அரசுகள் இழப்பீடு அறிவிப்பு

Oct 30, 2023,02:45 PM IST

விஜயநகரம்: ஆந்திராவில் 2 ரயில்கள் மோதிய விபத்தில்  பலியானோர் மற்றும் காயமடைந்தவர்களுக்கு மத்திய அரசும் மாநில அரசும் தனித்தனியாக நிவாரண உதவிகளை அறிவித்துள்ளன.


ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்திலுள்ள கண்டகபள்ளி ரயில் நிலையம் அருகே  பழுது காரணமாக நின்று கொண்டிருந்த பயணிகள் ரயில் மீது, விசாகப்பட்டினத்தில் இருந்து வந்த பாலசா பயணிகள் ரயில் மோதியது. இந்த விபத்தில் பாலசா ரயிலின் 4 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 18க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.


படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இரவில் விபத்து நடந்ததால் மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டது. விபத்து குறித்த தகவல் அறிந்த ரயில்வே அதிகாரிகள் மற்றும் மீட்பு குழுவினரும் அங்கு விரைந்து சென்று மீட்பு பணிகளை செய்தனர்.




இந்த விபத்தில் பலியானவர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்கு மத்திய அரசும், மாநில அரசும் ரயில்வே அமைச்சகம் சார்பில் தனித்தனியே நிவாரணம் அறிவித்துள்ளது. ஆந்திர மாநில அரசு சார்பில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, ரயில் விபத்தில் பலியானவர்களில் ஆந்திராவை சேர்ந்தவர்களுக்கு தலா ரூபாய் 10 லட்சமும், பிற மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு தலா ரூபாய் 2 லட்சமும் நிவாரணை வழங்கப்படும் என அறிவித்துள்ளார். 


மத்திய அரசு சார்பில் பிரதமர் மோடி நிவாரணமாக ரயில் விபத்தில் பலியானவர்களுக்கு தலா ரூபாய் 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூபாய் 50 ஆயிரமும் நிவாரணமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்