அமராவதி: ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக இரு மாநில அரசுகளுக்கும் தலா ரூ. 50 லட்சம் நிதியை வழங்கியுள்ளார் நடிகர் ஜூனியர் என்டிஆர்.
வங்கக்கடலில் உருவாகிய குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய இரு மாநிலங்களில் வரலாறு காணாத அளவுக்கு மழை கொட்டித்தீர்த்து வருகிறது. இந்த கனமழையால் அங்குள்ள அணைகள் நிரம்பி வருகின்றன. அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளன. இதனால் எங்கு பார்த்தாலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
புடமேரு ஆற்று வெள்ளமும், கிருஷ்ணா ஆற்று வெள்ளமும் விஜயவாடா நகரை சூழ்ந்துள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் தவித்து வருகிறார்கள். என்டிஆர், குண்டூர், கிருஷ்ணா, எலுரு, பல்நாடு, பாபட்லா மற்றும் பிரகாசம் ஆகிய மாவட்டங்கள் கனமழையில் சிக்கியுள்ளன. சுமார் 4 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் வெள்ள நீரில் சிக்கி தவித்து வருகின்றனர்.
மழை வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் மீட்டு வருகிறார்கள். வெள்ளத்தில் இருந்து மீட்கப்பட்டவர்கள் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் மருத்துவ வசதிகளும் அந்த அந்த மாநிலங்கள் செய்து கொடுத்து வருகின்றன.
இந்நிலையில், தெலுங்கு திரைப்பிரபலங்கள் வெள்ள நிவாரண உதவிகளை அளித்து வருகின்றனர். தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி மற்றும் அவரது மகன் ராம்சரண் இரு மாநிலங்களுக்கும் தலா 25 லட்சம் நிதி வழங்கியுள்ளனர். மகேஷ்பாபு தலா 25 லட்சம் அறிவித்துள்ளார். ஜூனியர் என்டிஆர் தலா 50 லட்சம் நிவாரண நிதியாக அறிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
LPG Cylinder price hike: வீட்டு உபயோக சிலிண்டரின் விலை ரூபாய் 50 உயர்வு.. மக்கள் அதிர்ச்சி..!
சமையல் எரிவாயு விலை ரூ.50 உயர்த்தப்பட்டது ஏழை, நடுத்தர மக்கள் மீதான தாக்குதல்: டாக்டர் ராமதாஸ்
சப் இன்ஸ்பெக்டர் பணிக்கான வயது வரம்பை 33 ஆக உயர்த்த வேண்டும்: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
தமிழக அரசியலில் தனிப்பெரும் தலைவராக சீமான் திகழ்கிறார்: பாஜக தலைவர் அண்ணாமலை புகழாரம்!
வங்கக்கடலில் உருவானது.. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்!
சட்டசபையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் ஒரு நாள் சஸ்பெண்ட்: சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!
இது ஏப்ரல் மாதமாகவே இருக்காது.. கூலான கோடையாக இருக்கும்.. அடுத்த 10 நாட்கள் மழை.. வெதர்மேன் அப்டேட்!
மன்னார் வளைகுடா பகுதியில்..புதிய மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படும்.. முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு
மாணவியர் விடுதி கட்டுவதற்கு பதிலாக தோழி விடுதி கட்டுவதா?: டாக்டர் ராமதாஸ் கேள்வி!
{{comments.comment}}