திருப்பாவை பாசுரம் 21 :
ஏற்றகலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்;
ஊற்றமுடையாய்! பெரியாய்! உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே! துயிலெழாய்;
மாற்றார் உனக்கு வலிதொலைந்து உன்வாசற்கண்
ஆற்றாதுவந்து உன்னடிபணியு மாபோலே,
போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோ ரெம்பாவாய்.
பொருள் :
எப்போது கேட்டாலும், எத்தனை அளவுடைய பாத்திரத்தை நீட்டினாலும் அவைகள் முழுவதும் நிரம்பி வழியும் வகையில் பால் தரும் வள்ளல் தன்மை கொண்ட பசுக்களை வைத்திருக்கக் கூடிய நந்தகோபாலரின் மகனாகிய கண்ணனே எழுந்திரு. வேதங்களால் போற்றப்படும் வலிமையானவனே, அந்த வேதங்களாலும் அறிய முடியாத பெரியவனே. உலகிற்கே ஒளி தரக் கூடிய சூரியனே. தூக்கத்தில் இருந்து எழுந்து கொள். உன்னை எதிர்த்தவர்களை வலிமை இழக்கச் செய்து, உன்னுடைய அருளை பெறுவதற்காக உன்னுடைய வாசலில் கிடக்க செய்வாய். அது போல நாங்களும் உன்னுடைய வாசலில் வந்து, உன்னுடைய அருளை பெறுவதற்காக காத்துக் கிடக்கிறோம். உன்னை போற்றிப் பாடி, உன்னுடைய திருவடிகளை பணிய காத்துக் கொண்டிருக்கிறோம். உன்னை புகழ்ந்து பாட வந்துள்ளோம். எங்களுடைய பக்தியை ஏற்று, எங்களுக்கு அருள் செய்வாயாக.
விளக்கம் :
பெரிய பெரிய மன்னர் எல்லாம் உனக்கு பயந்து, உன்னிடம் பணிந்து, உனக்காக காத்திருக்கிறார்கள். ஆனால் அடியாளர்களாகிய நாங்கள் பயத்தில் இல்லாமல், பாசத்துடன் காத்திருக்கிறோம் என்கிறார் ஆண்டாள். ஆயர்பாடியின் பசுக்களின் வளத்தை போற்றி இந்த பாடலை துவக்கிய ஆண்டாள், இயற்கையோடு கண்ணனின் ஆற்றலையும் ஒப்பிட்டு உயர்த்திப் பாடுகிறார். நீ எவ்வளவு பலம் வாய்ந்தவனாக இருந்தாலும் பக்தி என்னும் வலிமையான ஆயுதத்தை வைத்திருக்கும் எங்களுக்கு குழந்தையை போல தான். அதனால் நாங்கள் கூப்பிட்டதும் நீ வந்து தான் ஆக வேண்டும் என கண்ணனை உரிமையுடன் அழைக்கிறாள் சூடிக் கொடுத்த சுடர்கொடியாகிய கோதை நாச்சியார்.
CSK vs KKR.. பர்ஸ்ட் பேட்டிங் மாமே.. கேப்டன் தோனி மாஜிக்குக்காக ரசிகர்கள் வெயிட்டிங்!
எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் 2026 தேர்தலில் கூட்டாட்சி அமைப்போம்.. கூட்டணியை அறிவித்தார் அமித்ஷா
14க்கு 14 அடி செல்லில்.. அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தஹவூர் ராணா.. பலத்த பாதுகாப்பு!
தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம்: ஏப்., 15ம் தேதி முதல் ஜூன் 14ம் தேதி வரை
தமிழ்நாடு பாஜக தலைவராகிறார் நயினார் நாகேந்திரன்.. போட்டியின்றி தேர்வாகிறார்!
400 ஏக்கர் வனப்பகுதியை அழிக்கும் முடிவை தெலுங்கானா மாநில அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!
தமிழகத்தில்.. இன்று முதல் 17ஆம் தேதி வரை.. ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருக்கு!
விக்கிரவாண்டியை தொடர்ந்து கோவை.. த.வெ.க பூத் ஏஜென்ட் மாநாடு நடத்த முடிவு!
குமரி அனந்தன் மறைவு.. தமிழிசைக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய மத்திய அமைச்சர் அமித்ஷா!
{{comments.comment}}