ஆண்டாள் திருப்பாவை பாசுரம் 15 .. "எல்லே இளங்கிளியே! இன்னம் உறங்குதியோ?"

Dec 31, 2023,09:27 AM IST

திருப்பாவை பாசுரம் 15 :


எல்லே இளங்கிளியே! இன்னம் உறங்குதியோ ?

சில்லென் றழையேன்மின், நங்கைமீர்! போதர்கின்றேன்;

வல்லை, உன் கட்டுரைகள்! பண்டேஉன் வாயறிதம்!

வல்லீர்கள் நீங்களே, நானேதான் ஆயிடுக!

ஒல்லைநீ போதாய், உனக்கென்ன வேறுடையை?

எல்லோரும் போந்தாரோ? போந்தார், போந்து எண்ணிக்கொள்

வல்லானை கொன்றானை, மாற்றாரை மாற்றழிக்க

வல்லானை, மாயனைப் பாடேலோ ரெம்பாவாய்.




பொருள் : 


அழகான கிளி போன்ற பெண்ணே, இன்னும் உறங்கிக் கொண்டிருக்கிறாயா? உனக்காக நாங்கள் காத்திருந்து இவ்வளவு நேரம் அழைத்தும் இன்னும் நீ தூங்கிக் கொண்டிருக்கிறாயா? என தோழி ஒருத்தி செல்ல கோபம் கொள்கிறாள். அதற்கு வீட்டிற்குள் இருக்கும் தோழி, சரி...சரி...என் மீது சிடுசிடுத்து கோவம் கொள்ளாதீர்கள். வந்து விடுகிறேன் என்கிறாள். அதற்கு வெளியில் நிற்கம் தோழி, நாங்கள் அனைவரும் முன்னமே எழுந்து வந்து தினமும் உனக்காக காத்திருக்க வேண்டுமா? அப்படி என்ன எங்களிடம் இல்லாத சிறப்பு உனக்கு உள்ளது என கோபம் கொள்கிறாள்.


அதற்கு அந்த பெண், நான் மட்டும் எழாமல் தூங்கி விட்டதை போல பேசுகிறீர்களே எல்லோரும் வந்த விட்டார்களா? என வீட்டிற்குள் இருந்த படியே கேட்கிறாள். அதற்கு வெளியில் இருக்கும் தோழி, எல்லோரும் வந்து விட்டார்களா என்பதை நீயே வெளியில் வந்து எண்ணிப் பார்த்துக் கொள். வலிமை மிக்க குவலயாபீடம் என்னும் யானையை அடக்கியவனும், எதிரிகளை வேட்டையாடும் திறம் கொண்டவனுமாகிய மாயக் கண்ணனை வணங்கி மகிழ நாங்கள் புறப்பட்டு விட்டோம். நீயும் அவனை வணங்கி மகிழ எங்களுடன் வா என்கிறார்கள்.


விளக்கம் :


மற்றவர்கள் வந்து விட்டார்களா, பக்தி செய்கிறார்களா என வீணான பேச்சுக்களில், மற்றவர்களுடன் ஒப்பிட்டு பொழுதை வீணடித்துக் கொண்டிருக்காமல்,  இறைவனை பாடி வணங்கி, மகிழ வேண்டும் என தோழிக்கு கூறுவதை போல் நமக்கு அறிவுரை வழங்குகிறார் ஆண்டாள். கண்ணனை சிறு குழந்தை தானே என சாதாரணமாக நினைத்து இருந்து விட வேண்டாம். அவன் லீலை செய்து விளையாடுவதால், அவனை விளையாட்டுப் பிள்ளை என நினைக்காதீர்கள். அவன் மிகவும் வலிமை மிக்கவன் என்பதையும் ஆண்டாள் இந்த பாடலில் விளக்கி உள்ளார்.


சமீபத்திய செய்திகள்

news

நெற்றிப் பொட்டு போயே போச்சு.. கவனிச்சீங்களா?.. முழுமையான பெரியார் தொண்டனாக மாறிய விஜய்!

news

வடக்கு அந்தமான் அருகே.. புதிய காற்றழுத்தம்.. நாளை உருவாகும் என்று வானிலை மையம் தகவல்

news

சக்ஸஸ்.. மெட்ரோ ரயில் திட்டத்தின் 2வது வழித்தடத்தில்.. சுரங்கம் தோண்டும் பணி முடிந்தது!

news

வளைகாப்பு நடத்துவது எப்படி? வேலூர் காங்கேயநல்லூர் அரசுப் பள்ளி மாணவிகளின் ரீல்ஸ்..டீச்சர் சஸ்பெண்ட்!

news

Su Venkatesan Vs Vanathi Srinivasan.. உங்களுக்கு ஒவ்வாமையா.. முதல்ல பன் பட்டருக்கு வழி சொல்லுங்க!

news

ஐபோன் 16 விற்பனை தொடக்கம்.. நீண்ட க்யூவில் நின்று போட்டி போட்டு வாங்கிச் சென்ற ஐ போன் பிரியர்கள்!

news

திருப்பதி லட்டில் கொழுப்பா... குடும்பத்தோடு சத்தியம் செய்ய நாயுடு ரெடியா? .. ஜெகன் கட்சி சவால்!

news

உளவியல் சிகிச்சைக்கு மருந்து மாத்திரைகளுடன்.. உரிய மருத்துவர்களை அணுக வேண்டும்.. வைரமுத்து

news

என்னிடம் அரசியல் கேள்வி கேட்காதீங்கன்னு சொன்னேன்ல.. செய்தியார்களிடம் சீறிய ரஜினிகாந்த்!

அதிகம் பார்க்கும் செய்திகள்