திருப்பாவை பாசுரம் 06 :
புள்ளும் சிலம்பினகாண்; புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?
பிள்ளாய்! எழுந்திராய், பேய்முலை நஞ்சுண்டு,
கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி,
வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை,
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம்
உள்ளம்புகுந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்.
பொருள் :
புற்கள், சிறு பறவைகள் ஒலி எழுப்புவதை பார். நம்முடைய தலைவனாகிய திருமாலின் கையில் இருந்து வெள்ளை நிற சங்கு கோவிலில் எழுப்பும் பெரும் சத்தம் உனக்கு கேட்கவில்லையா? பெண்ணே! விழித்துக் கொள். கம்சன் அனுப்பிய அரக்கியிடம் பால் குடிப்பதை போல் நடித்து, அவளை கொன்றவன் நம்முடைய கண்ணன். அழகாக பூத்த பூக்களை மலர்களுடன், தங்களின் உள்ளம் என்னும் தாமரையையும் கண்ணனுக்கு படைத்து வழிபட முனிவர்களும், யோகிகளும் காத்திருந்து ஹரி, ஹரி என சத்தமிடும் பெரும் சத்தமும் உன் காதில் விழவில்லையா. நம்முடைய மனங்களில் குடிகொண்டிருக்கும் கண்ணனின் அருளை பெறுவதற்காக காத்திருந்து, அவரை அழைப்பது கேட்காமல் இன்னும் இப்படி தூங்கிக் கொண்டிருக்கிறாயே.
விளக்கம் :
உலகில் உள்ள அனைத்து உயிர்களும் இறைவனின் அருளை பெறுவதற்காக காத்திருக்கின்றன. உலகில் 64 லட்சம் உயிரினங்கள் வாழ்வதாக கருட புராணம் சொல்கிறது. அனைத்து உயிர்களையும் காப்பது இறைவன் என்றாலும், அவனுடைய அருள் தனக்கு கிடைக்காதா என அனைத்து உயிர்களும் ஏங்கிக் கிடக்கின்றன. ஆனால் மனிதர்களாக பிறந்த நாம் மட்டும் உலக இன்பங்கள், சுகங்களில் உளன்று இறைவனின் அருளை பெற முயற்சிக்காமல் காலத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறோம் என்பதையே இந்த பாடலில் ஆண்டாள் தெளிவுபடுத்தி உள்ளார்.
நெற்றிப் பொட்டு போயே போச்சு.. கவனிச்சீங்களா?.. முழுமையான பெரியார் தொண்டனாக மாறிய விஜய்!
வடக்கு அந்தமான் அருகே.. புதிய காற்றழுத்தம்.. நாளை உருவாகும் என்று வானிலை மையம் தகவல்
சக்ஸஸ்.. மெட்ரோ ரயில் திட்டத்தின் 2வது வழித்தடத்தில்.. சுரங்கம் தோண்டும் பணி முடிந்தது!
வளைகாப்பு நடத்துவது எப்படி? வேலூர் காங்கேயநல்லூர் அரசுப் பள்ளி மாணவிகளின் ரீல்ஸ்..டீச்சர் சஸ்பெண்ட்!
Su Venkatesan Vs Vanathi Srinivasan.. உங்களுக்கு ஒவ்வாமையா.. முதல்ல பன் பட்டருக்கு வழி சொல்லுங்க!
ஐபோன் 16 விற்பனை தொடக்கம்.. நீண்ட க்யூவில் நின்று போட்டி போட்டு வாங்கிச் சென்ற ஐ போன் பிரியர்கள்!
திருப்பதி லட்டில் கொழுப்பா... குடும்பத்தோடு சத்தியம் செய்ய நாயுடு ரெடியா? .. ஜெகன் கட்சி சவால்!
உளவியல் சிகிச்சைக்கு மருந்து மாத்திரைகளுடன்.. உரிய மருத்துவர்களை அணுக வேண்டும்.. வைரமுத்து
என்னிடம் அரசியல் கேள்வி கேட்காதீங்கன்னு சொன்னேன்ல.. செய்தியார்களிடம் சீறிய ரஜினிகாந்த்!
{{comments.comment}}